பக்கம் எண் :

தராய்ப் பணிவார் சருக்கம்464


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
    

61. திருவாரூர்ப்பிறந்தார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

"திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்"

    - திருத்தொண்டந்தொகை - (10)
 

வகை
 

 
"செல்வந் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார்
செல்வன் றிருக்கணத் துள்ளவ ரேயத னாற்றிகழச்
செல்வம் பெருகுதென் னாரூர்ப் பிறந்தவர் சேவடியே
செல்வ நெறியுறு வார்க்கணித் தாய செழுநெறியே"

- திருத்தொண்டர் திருவந்தாதி - (73)
 

விரி
 

4158. ருவாகி யுருவாகி யனைத்துமாய் நின்றபிரான்
மருவாருங் குழலுமையாண் மணவாளன் மகிழ்ந்தருளுந்
திருவாரூர்ப் பிறந்தார்க டிருத்தொண்டு தெரிந்துணர
ஒருவாயாற் சிறியேனா லுரைக்கலாந் தகைமையதோ?                 1
 
     புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பதினொன்றாவது பத்தராய்ப் பணிவார்
சருக்கத்துள், நான்காவது திருவாரூர்ப் பிறந்தார்கள் புராணங் கூறத் தொடங்குகின்றார்;
இவர்களது பண்புகூறும் பகுதி.
 
     தொகை :- பொழிப்பு உரைத்துக்கொள்க. எல்லார்க்கும் - முற்றும்மை;
திருவாரூரிற் பிறக்கும் முன்னைத் தவமுடைய எல்லா வுயிர்களையும் உள்ளடக்கி
நின்றது; "திருவாரூர்த் தோற்றமுடை யுயிர்கொன்றான்" (126) "சங்கையிலா வருந்தவ
முன் புரிந்தார்" (புராணசாரம்.)
 
     வகை :- செல்வம்...அதனால் - செல்வம் விளங்கிய திருவாரூரின் திருமதிலின்
வட்டத்தினுட் பிறந்தவர்கள் சிவபிரானது திருக்கணத்திற் சேர்ந்தவர்களேயாவர்;
ஆதலினால்; திகழ....சேவடியே - விளங்க உயர்ந்த வளங்கள் பெருகும்
தென்றிருவாரூரிற் பிறந்தவர்களின் திருவடியே; செல்வ....நெறியே - வீட்டு நெறியினை
அடைவார்களுக்கு அணிமையாகிய நல்ல நெறியாகும்.
 
     செல்வம் - சொற்பின் வருநிலை; மதில்வட்டம் - நகரின் மதிலாற் சூழப்பட்ட
இடம்; சோழ அரசரது தலைநகராதலாலும், தியாகராசர் ஆளும் நகராதலாலும் இது