தருக்குதல் - அகங்கரித்தெழுதல். |
ஒருக்கிய - இரண்டற ஒன்றுபடுத்தப்பட்ட. |
உயர் நெறி - சிவநெறி. |
இவர்கள் சிவகணங்களேயாவர் என்பது நமிநந்தியார் புராண வரலாற்றானு முணர்க. “அணித்தாய செழுநெறி” - வகைநூல். |
தாள்வணங்க - என்பதும் பாடம். 2 |
திருவாரூர்ப் பிறந்தார்கள் புராணம் பண்பு - சிவபெருமான் திருக்கணத்தவர்களே திருவாரூர்ப் பிறந்தார்கள். அவர்கள் திருவடிகளை வணங்குதல் சிவநெறி அணுகப் பெறும் சாதனமாகும். |
கற்பனை :- (1) திருவாரூரிலே பிறத்தற்கு முன்னைத் தவமுதிர்ச்சி வேண்டும். |
(2) முன்னைத் தவமுற்றியோர் சிவகணங்கள். |
(3) சிவகணங்களே திருவாரூர்ப்பிறந்தார்கள். |
(4) இவர்களை வணங்குதல் சிவநெறிப் பேறுதரும். |
61. திருவாரூர்ப் பிறந்தார் புராணம் முற்றும். |