காசிபர், கௌசிகர் என்ற ஐந்து இருடியரின் கோத்திரங்களின் வழியே விருத்தியாகி வழிவழி வருபவர்கள் என்பது; இவ்விருடியர் சிவபெருமான்பால் உபதேசம் பெற்றவர்கள்; இவர்கள் வழிவழி சிவபிரானுக்கே அகம்படித் தொண்டிபுரிபவர்கள். “மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும் வேதியர் குலம்” (149) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க. |
மெய்ப்போதநெறி வந்தவிதி - உண்மைஞானமாகிய சிவாகம நெறி; இது சத்தி நிபாதர்க்குணர்த்தும் சிறப்புநூல் விதி. வேதம் உலகர்க்குணர்த்தும் பொதுநூல் விதியாம். மெய்ப்போதம் - சிவாகமம்; நெறி - சரியையாதி நானெறி. |
விதிமுறைமையாவது - விதித்த, மந்திரம் - பாவனை - கிரியை என்ற மூன்றானும் வழிபாடு செய்யும் முறை. |
ஆர்வம் மிகும் அன்பு - அன்பினை அடிப்படையாகக் கொண்டு முற்றிய ஆசை. |
முதற்சைவராம் - சிவன் அநாதி சைவன்; சிவனிடமாக வந்து முதற்றீக்கை பெற்று வழிவழி வருதலின் முதற்சைவர் - ஆதிசைவர் எனப்படுவர்; முனிவர் - மனனசீலர்; புகழ்த்துணை நாயனார் புராணம் பார்க்க. |
முப்போதும் - காலை - நண்பகல் - மாலை - என்ற மூன்றுகாலங்கள். “முப்போதும்” (வகைநூல்) திரிகால சந்தி என்பது வடமொழி; இந்நிலை இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்ற மூன்றினும் ஆகும் படியினை மேல்வரும்பாட்டிற் காண்க. எப்போதும் -முப்போதும் - முற்றும்மைகள். “சந்தி மூன்றினுந் தாபர நிறுத்தி” (நம்பி - தேவா). 1 |
4161. | தெரிந்துணரின் முப்போதுஞ் செல்கால நிகழ்காலம் வருங்கால மானவற்றின் வழிவழியே திருத்தொண்டின் விரும்பியவர்ச் சனைகள்சிவ வேதியர்க்கே யுரியன;வப் பெருந்தகையார் குலப்பெருமை யாம்புகழும் பெற்றியதோ? 2 |
(இ-ள்) தெரிந்து உணரின் - ஆராய்ந்து உணர்ந்தால்; முப்போதும் - முன்கூறிய மூன்று காலங்களிலும்; செல்காலம்.....ஆனவற்றின் - இறப்பு - நிகழ்வு - எதிர்வு என்று மூன்றாகப் பகுக்கப்படும் எக்காலத்திலும்; வழிவழியே......உரியன - வழிவழியாகச் சிவனது அகம்படித் திருத்தொண்டில் விரும்பிய வழிபாட்டர்ச்சனைகள் சிவமறையோர்களுக்கே உரியனவாம்; அப்பெருந்தகையார்....பெற்றியதோ? - அந்தப் பெருந்தகையாளர்களின் குலத்தின் பெருமை எம்மாற் புகழப்படும் தன்மையுள் அடங்குமோ? (அடங்காது). |
(வி-ரை) தெரிதல் - ஆராய்தல்; முப்போது - முன் பாட்டிற் கூறிய வழிபாட்டுக் காலங்கள். |
செல்காலம்...ஆன - செல்காலம் - சென்றகாலம் - இறந்தகாலம்; இவை காலப்பாகுபாடுகள். முன் கூறியவை நாட்கூறுபாடுகளும் வழிபாட்டுக் குரிய நேரங்களுமாம். செல்கால முதலிய மூன்றினும் என முற்றும்மை விரிக்க. |
ஆனவற்றின் - உரியன - முன்காலத்திலும் உரித்தாயிருந்தன; இப்போதும் உரியன; இனியும் உரியனவாவன. |
வழிவழியே - பரம்பரையாக; முன் பாட்டின் உரை பார்க்க. |
வழிவழியே - சிவ வேதியர்க்கே உரியன - ஏகாரங்களுள் முன்னையது தேற்றம். பின்னையது பிரிநிலை; ஏனையமறையோர் முதலிய எவர்க்கும் உரியனவல்ல என்பதாம்; இக்கூறிய அர்ச்சனைகள் சிவாலயங்களிற் செய்யும் பரார்த்தபூசை; ஏனைய பிரமவேதியர்களாகிய சிவதீக்கை பெற்ற மகாசைவர் முதலியோர் ஆன் |