மனங்கசிந்த நிறைவுடைமையாலே முழுதும்நீறு பூசிவாழும் தூயவர்களது செயலினை அறிந்தவாறு சொல்லப்புகுகின்றேன். 3 |
(வி-ரை) இப்பாட்டும் பல பிரதிகளில் இல்லை; |
நாதனை - பெருமானை - அண்ணலை - என மூன்றுவகையாற் கூறியது சரியை கிரியை யோகம் என்ற மூன்று நெறிகளின் வழிபாட்டுரிமை உணர்த்தற்கு. |
அறியவொண்ணா - நெறியல்லா கெறியாற் றேடினாராதலின் இருவருங் கண்டிலர் என்றார் பேராசிரியர். |
ஞானமான ஆரணம் - வேதங்களின் ஞானகாண்டமானவும் வேதசிரசு என்னும் உபநிடதங்களும் ஆம்; சிவவேதியர்கள் வேதம் ஆகமம் என்ற இரண்டற்கும் உரிமையுடையவர். |
உட்பொருள்கள் - உட்குறிப்பாய் இதயத்துட் கொண்டு வைத்துவிளங்கும் சிறந்த உண்மைகள். |
எண்ணிய - எண்ணப்பட்ட; விதித்த. |
சிந்தை கசிந்துள்ள அப்பூரணத்தினாலே என்க; பூரணம்; நிறைவு - நிறைவாவது வேறொன்றற்கும் இடங்கொடாது முழுமையும் வியாபித்தல். |
முழுநீறு பூசி - முழுமையும் நீறு அணிந்து. “முழுவதுமெய் யணிவ ரன்றே” (4168.) அறிந்த ஆ - அறிந்த ஆறு - தொகுத்தல் விகாரம்; |
புனிதர் - முனிவர். 4 |
முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் - பண்பு - எப்போதும் இனியராகிய சிவன் முகத்தில் தோன்றி, அவரருளாலே விருத்தியாகிச், சிவாகம நெறிவழுவாமல், ஆர்வமிகும் அன்புடன் முப்போதும் சிவனை அருச்சிக்கும் ஆதிசைவர்களாகிய முனிவர்கள் முப்போதும் திருமேனி தீண்டுவார்கள் எனப்பெறுவார்கள். |
கற்பனை :- (1) சிவன் எல்லாவுயிர்க்கும் எப்போதும் இனியவர். |
(2) சிவவேதியர்கள் சிவ சிருட்டியாகச் சிவனைம் முகங்களினின்றும் தோன்றி விருத்தியாயினவர்கள். |
(3) சிவ ரார்த்த பூசை சிவாகம விதிப்படி அம்முறையிற் செய்யத்தக்கன. |
(4) சிவார்ச்சனை மூன்றுகாலமுஞ் செய்யத்தக்கது. |
(5) எல்லாக்காலத்திலும் சிவார்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன; ஏனையோர்க்குப் பரார்த்த பூசை உரியதன்று. |
(6) சிவவேதியர்கள் வேதாகம மிரண்டற்கும், ஆன்மார்த்த பரார்த்த பூசைகள் இரண்டற்கும் உரியவர்கள். |
(7) வேதங்களின் ஞானகாண்டத்தின் உட்பொருளாகிய சிவனது பூசையும் சிவவேதியர்களுக்கேரியது வாகும். |
62. முப்போதும் திருமேனி தீண்டுவார் புராணம் முற்றும். |