பக்கம் எண் :

பெரியபுராணம்485


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

65. பூசலார் நாயனார் புராணம்
 

தொகை
 

“மன்னியசீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல்
(வரிவளையாண் மானிக்கு நேசனுக்கு) மடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (11)

வகை
 

 
“பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையான்
கதுமெனச் செய்குவ தென்றுகொலா?” மென்று கண்டுயிலா
ததுமனத் தேயெல்வி தோறு நினைத்தருள் பெற்றதென்பர்
புதுமணற் றென்ன லுலாநின்ற வூர்தனிற் பூசலையே”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (78)
 

விரி
 

4171. அன்றினார் புரமெரித்தார்க் காலய மெடுக்க வெண்ணி
யொன்றுமங் குதவா தாக “வுணர்வினா லெடுக்குந் தன்மை
நன்” றென மனத்தினாலே நல்லவா லயந்தான் செய்த
நின்றவூர்ப் பூச லார்தம் நினைவினை யுரைக் லுற்றாம்.           1
 
     சருக்கம் :- இனி, நிறுத்த முறையானே, பன்னிரண்டாவதாக “மன்னியசீர்” என்று
தொடங்கும் திருத்தொண்டத் தொகைப் பாசுரத்திற் போற்றும் அடியார்களின் வரலாறு
கூறும் பகுதி.
 
     புராணம் :- பன்னிரண்டாவது மன்னியசீர்ச் சருக்கத்துள் முதலாவது பூசலார்
நாயனாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி.
 
     தொகை :- நிலைபெற்ற சிறப்பினையுடைய, வேதமோதும் வாக்கினையுடைய,
திருநின்றவூரில் அவதரித்த பூசலார் நாயனாருக்கும் (வரிவளை யணிந்த மானியார்
என்னும் மங்கையர்க்கரசி யம்மையாருக்கும் நேச நாயனாருக்கும்) அடியேனாவேன்.
 
     மன்னியசீர்ப் - பூசல் என்று கூட்டுக. மன்னிய சீராவது புறப்பூசையினும்,
நிலைபெற்ற உறைப்புடைய அகப்பூசைத் தொழில் சிறப்புடையது என உலகினுக்கு
இறைவர் காட்டியருளக் கருவியாயமைதல்; நாவன் - வாக்கினையுடையவன்; “மறைபயி
றிப்பிய வாசகன்” (திருமுறை - ஆளுடைய பிள் - கலம் - 9); நின்றவூர் - நாயனாரது
பதி; பூசல் - நாயனாரது பெயர். இங்குத் தொகை நூலுள் ஓரடியிற்பாதியில் மூன்று
நாயன்மாரைப் போற்றிய சிறப்புக்குறிக்க.