சாரும் நாளில் - அதனைச் சார்ந்த முன்னாளில். நாளில் - எய்தி - என்று - போந்தார் - என மேல்வரும் பாட்டுக்களுடன் கூட்டி முடிக்க. |
இப்பாட்டாற் கோயில் அமைப்புக்கு வேண்டிய அங்கங்கள் எல்லாம் கூறப்பட்டன. |
தாவரம் - தாபனம் (பிரதிட்டை) - என்பனவும் பாடங்கள். 8 |
4179. (வி-ரை) காடவர்.....எடுத்து - இந்தக் காடவர் - பல்லவ அரசராகிய இராச சிங்கர் என்றும், இந்தக் கற்றளி - கச்சியிற் சிறந்த கைலாயநாதர் கோயில் என்றும், இது சீகயிலாயத் திருக்கோயில் போன்ற அமைப்புக்களுடன் நிறுவப்பட்ட தென்றும் சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். கோமான் - கருத்தர். |
தாபிக்கும் அந்நாள் - கும்பாபிடேகம் செய்து பிரதிட்டை செய்தல் என்பர். சிவாகம விதிப்படி மந்திரம் பாவனை கிரியைகளால் சிவனை அங்கு மந்திரத்திருமேனியினின்றும் இலிங்கத் திருமேனியில் நிறுத்தல்; அந்நாள் - குறித்த நாள். |
அந்நாள் முன்னாள் - அந்நாளின் முந்திய நாளிலே; உருபு விரிக்க. |
மாடெலாம்.....பெருஞ்செல்வம் - பக்கங்களில் எல்லாம் விளைநிலம் முதலிய செல்வங்கள். |
மாடு - பக்கம்; செல்வங்கள் - பொருள். தமது பொருள்கள் எல்லாம் சிவனுக்காகும்படி என்றலுமாம். |
செய்வான் - செய்வானாகி; செய்வான் - தாபிக்கும் - என்று கூட்டுக. |
நாட....தாபிக்கும் - திருமாலுக்கும் தேட அறியாராயினும் அன்பர் விருப்பின் படி அங்குச் சிவலிங்கத் திருமேனியில் வெளிப்பட வீற்றிருக்கச் செய்யும் என்பது குறிப்பு. மோனை நயம்பற்றி ஆடமால் என்று கொண்டு அகந்தையால் அடிகாண்பன் என்று உரையாடியமையால் என்றும், அரவின் மீதாடியமால் என்றும் கூறுவாரு முண்டு. |
ஏடு - இதழ்; வேய்தல்: சூடுதல். |
கனவில் - அக்காடவர் கோமானது கனவில். 9 |
4180. (வி-ரை) நெடிது நாள் நினைந்து - “நெடிது நாள் கூட” (4177); மனத் திருப்பணி முற்றச் செய்த நிலை காட்டியபடி. நினைந்து - நினைவினாலே. |
நன்று நீடு - நன்மை நீடிய; புறக்கோயில்கள்போலக் காலாந்தரத்தில் அழிவுறாது என்றும் நீடும் நன்மையுடையது அக்கோயில் என்பது. |
புகுவோம் - இலிங்கத் திருமேனியில் விளங்க எழுந்தருளுவோம்; வெளிப்படும் இடமாகக் கொள்வோம். |
இங்கு ஒன்றிய செயல் - இங்கு அத்தன்மை பொருந்த எண்ணிய செயல்; செயலைப் - பின் - கொள்வாய் - என்க. நாளை ஒழிந்து - நாளையதினத்தை நீக்கிப் பின்னர். கொள்வாய் - நிகழ்த்துவாயாக; செயல் - தாபனம். |
தொண்டர் கோயில் - பூசலாரது மனக்கோயில். |
கொண்டருளுதல் - இருப்பிடமாகக் கொண்டு விளங்க வீற்றிருந்தருளுதல். |
போந்தார் - மறைந்தருளினர். இவ்வருளிப்பாடு அரசருக்கு பூசலாரது திருத்தொண்டின் உயர்வினையும், பூசலாரது பெருமையினையும் அறிவித்தருளி, அதன் மூலம் உலகறியச் செய்து உய்விக்கும் திருவுள்ளக் கருணைபற்றி எழுந்தது; கழறிற்றறிவாருக்கு நம்பிகளை நினைப்பிக்கும் வகையாற் செய்த (3791 - 44) அருளிப்பாட்டினை இங்கு நினைவு கூர்க; இங்கு இரண்டு கோயில்களிலும் ஒருங்கே விளங்கும் |