பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்506


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

67. நேசநாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“மன்னியசீர் மறைநாவ னின்றவூர்ப் பூசல்
வரிவளையாண் மானிக்கு நேசனுக்கு மடியேன்

- திருத்தொண்டத் தொகை - (11)
 

வகை
 

“நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படை நல்கினர்தந்
தாட்டரிக் கப்பெற் றவனென்பர் சைவத் தவரரையிற்
கூட்டு மகப்படக் கோவண நெய்து கொடுத்துநன்மை
யீட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை யிம்மையிலே

- திருத்தொண்டர் திருவந்தாதி - (80)
 

விரி
 

4192.     சீர்வளர் சிறப்பின்மிக்க செயன்முறை யொழுக்கங் குன்றா
நார்வளர் சிந்தை வாய்மை நன்மையார் மன்னி வாழும்
பார்வளர் புகழின் மிக்க பழம்பதி மதிதோய் நெற்றிக்
கார்வளர் சிகர மாடக் காம்பீலி என்ப தாகும்.                 1
 
     புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பன்னிரண்டவது மன்னியசீர்ச்
சருக்கத்தினுள் மூன்றாவது நேசநாயனார் புராணம் கூறத் தொடங்குகின்றார்; நேச
நாயனாரது வரலாறும் பண்பும் கூறும்பகுதி.
 
     தொகை :- பொழிப்பு உரைத்துக் கொள்க.
 
     நேசனுக்கும் - உம்மை - எண்ணும்மை; நேசன் - காரண இடுகுறிப் பெயர்;
சிவனையும் சிவனடியாரையும் போற்றும் தேசு (ஞான விளக்கம் ) நேசம் எனப்பட்டது
என்பது ஆசிரியர் திருவாக்கு (4192); “தாள்தரிக்கப் பெற்றவன்” (வகை)
 
     வகை :- நாட்டமிட்டு.....நல்கினர்தம் - கண்ணைத் தோண்டி இட்டு அருச்சித்து
முன்னாள் திருமால் வழிபட வெற்றிதரும் சக்கரப்படையினை அளித்த இறைவரது;
தாள்......என்பர் - திருவடியைத் தாங்கப்பெற்றவர் என்று எடுத்துக் கூறுவர்; சைவத்தவர்
அரையில்........கொடுத்து - சிவனடியார்களுடைய அரையில் கட்டும் உடையும் கீளொடு
கோவணமும் தாமே நெய்து கொடுத்து; நன்மை...இம்மை