| வெம்பிச் சிலம்பி துதிக்கையினிற் புக்குக் கடிப்ப, வேகத்தாற் கும்ப யானை கைநிலத்தின் மோதிக் குலைந்து வீழ்ந்ததால். 5 |
(இ-ள்) எம்பிரான்றன்.....என்று - எமது பெருமானது திருமேனியின் மேல் சருகுகள் விழாமைப் பொருட்டு நான் வருந்தி மேற்கட்டியாக இழைத்த நூல்வலயத்தினை இந்த யானை அழிப்பதா ? என்று; உருத்தெழுந்து.....கடிப்ப - மிகச்சினந்து எழுந்து மனம்புழுங்கி யானையினது துதிக்கையினுள்ளே புகுந்து கடிக்க; வேகத்தால்.....வீழ்ந்ததால் - அதன் குடைச்சலினாலே கையைத் தரையில் அடித்து மோதி நிலைகுலைந்து, வீழ்ந்து இறந்தது; (ஆல் - அசை). |
(வி-ரை) எம்பிரான்றன்.....அழிப்பதே - இது யானையின் செயலைப்பற்றிச் சிலம்பி எண்ணியது. முதலில் கரம் சுலவிற்று என்று நல்ல எண்ணத்தையே கொண்ட சிலம்பி, மீள மீளச் செய்யக்காணலின் பகைமைச் செயலாகக் கண்டு சினந்தது. |
உருத்து எழுந்து வெம்பி - சிலம்பியின் மிகச்சினந்த மனநிலை |
துதிக்கையினிற் புக்குக் கடிப்ப - மிகச் சிறியோரும் மிகப் பெரியோரை நிலை குலையச் செய்யவல்லராகுவர் என்பதுண்மை. |
வேகத்தால்.....குலைந்து - வீழ்ந்ததால் - துதிக்கையின் உட்புறம் மூளையின் அணிமையில் மிக நுட்பமான தசைகளையுடையது; அதில் விளைந்து ஊற்றின் துன்பம் பெரிதாகலானும், வேறு எவ்வழியானும் அதனைப் போக்கிக்கொள்ளுதல் யானைக்கு இயலாமையானும் கையைத் தரையில் மோதி நிலைகுலைந்து வீழ்ந்தது. |
வீழ்ந்தது - வீழ்ந்திறந்தது; சிலம்பி - சுதைச்சிலம்பி போன்ற பெரும் சிலம்பிவகை. இது விடத்தன்மையுடைய தாதலின் இறப்பை விளைத்தது என்க. 5 |
4202. | தரையிற் புடைப்பக் கைபுக்க சிலம்பி தானு முயிர்நீங்க மறையிற் பொருளுந் தருமாற்றான் மதயா னைக்கும் வரங்கொடுத்து முறையிற் சிலம்பி தனைச்சோழர் குலத்து வந்த முன்னுதித்து நிறையிற் புவனங் காத்தளிக்க வருள்செய் தருள நிலத்தின்கண், 6 |
வேறு |
4203. | தொன்மைதரு சோழர்குலத் தரசனாஞ் சுபதேவன் தன்னுடைய பெருந்தேவி கமலவதி யுடன் சார்ந்து மன்னுபுகழ்த் திருத்தில்லை மன்றாடு மலர்ப்பாதஞ் சென்னியுறப் பணிந்தேத்தித் திருப்படிக்கீழ் வழிபடுநாள். 7 |
4204. | மக்கட்பே றின்மையினால் மாதேவி வரம்வேண்ட செக்கர்நெடுஞ் சடை முடியார் திருவுள்ளஞ் செய்தலினால் மிக்கதிருப் பணிசெய்த சிலம்பிகுல வேந்துமகிழ் அக்கமல வதிவற்றி னணிமகவாய் வந்தடைய, 8 |
வேறு |
4205. | கழையார் தோளி கமலவதி தன்பாற் கருப்ப நாணிரம்பி விழைவார் மகவு பெறவடுத்த வேலை யதனிற், காலமுணர் |