பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்526

 
     முன்னினார் - முன்னிச் சென்று அடைந்தனர் என்ற பொருள்தந்து நின்றது.  15
                                         
 
4212.     திருவார்ந்த செம்பொன்னி னம்பலத்தே நடஞ்செய்யும்
பெருமானை யடிவணங்கிப் பேரன்பு தலைசிறப்ப
உருகாநின் றுளங்களிப்பத் தொழுதேத்தி யுறையுநாள்
வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்.                16
 
     (இ-ள்) திருவார்ந்த.....வணங்கி - சைவமெய்த்திருவே மிக்க செம்பொற்றிரு
வம்பலத்திலே திருநடம் செய்தருளுகின்ற இறைவரை அடிவணங்கி;
பேரன்பு....உறையுநாள் - பேரன்பு மேன்மேலோங்க மனமுருகி மகிழ்ச்சியடையத்
தொழுது துதித்து அங்குத் தங்கும் நாளிலே; வருவாய்மை......சமைத்தார் -
வாய்மையொழுக்கத்தில் வருகின்ற தில்லைவாழந்தணர்களுக்கு உறையுளாகிய
திருமாளிகைகள் பலவற்றையும் எடுப்பித்தார்.
 
     (வி-ரை) திரு - சைவமெய்த்திரு; முத்தித்திரு; தலைசிறத்தல் - மிக்கோங்குதல்;
உளம் உருகா நின்று களிப்ப என்க; உருகா நின்று - உருகி;
 
     உறையுநாள்....சமைத்தார் - தில்லையில் செங்கண்ணார் பலகாலம் தங்கி
யிறைவரை வழிபட்டிருந்தனர் என்பதாம்; தானங்கள் பல சமைத்தார் - (4210) என்று
கூறியபடியே ஈண்டும் “மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்” என்றார்,
“நாமிவரிலொருவர்” என்று இறைவரால் அருளிச் செய்யப்பெற்ற சிவத்திருப்
பண்புடையார்கள் இத் தில்லைவாழந்தணர்களாதலின், இவர்கள் உறையும்
திருமாளிகைகள் “கற்றாங் கெரியோம்பும்” சிறப்பினால் சிவனுறையும் தானங்களோ
டொப்ப எண்ணப்படும் சிறப்புடையன என்ற குறிப்புத்தருதற்கு; இச்செய்தி “நல்ல
வம்புமலர்த்தில்லை யீசனைச் சூழ மறைவளர்த்தான்” என்ற வகைநூலின் ஆதரவுபெற்று
அதனை விரித்துரைத்தபடியாம்.
 
     வாய்மை வருமறையவர் என்க. தில்லைவாழந்தணர்கள். வாய்மையின்
வருத
லாவது சத்தாகிய தத்துவ நெறியில் வழிவழி ஒழுகிவருதல். (354 - 356)
முதலியவை பார்க்க. எனவே இவையும் சிவன் றிருத் தொண்டாகப் போற்றப்பட்டன.
 
     தலைசிறக்க - சிறந்தோங்க.                                    16
 
4213.    தேவர்பிரான் திருத்தொண்டிற் கோச்செங்கட் செம்பியர்கோன்
பூவலயம் பொதுநீக்கி யாண்டருளிப் புவனியின்மேல்
ஏவியநற் றொண்டுபுரிந் திமையவர்க ளடிபோற்ற
மேவினார் திருத்தில்லை வேந்தர்திரு வடிநிழற்கீழ்.               17
 
     (இ-ள்) தேவர்பிரான்.....செம்பியர்கோன் - தேவர்பெருமானாராகிய
சிவபிரானுடைய திருத்தொண்டினாலே கோச்செங்கட்சோழராக அவதரித்த
செங்கண்ணார்; பூ.....புரிந்து - உலகம் பிறர்க்கும் பொது என்னாது தமக்கே
சிறப்பாயுரியது என்று சொல்லும்படி தனியரசாட்சி புரிந்தருளி; புவனியின்மேல் ஏவிய
நற்றொண்டு புரிந்து - இந்நிலவுகில் சிவபெருமான் அருள்செய்து செலுத்தியவாறு நல்ல
சிவத்தொண்டுகளைச் செய்து; இமையவர்கள்.....கீழ் - தேவர்கள் வணங்கும்படி
திருத்தில்லை நடராசரது திருவடி நிழலின்கீழ்ப் பொருந்தினார்.
 
     (வி-ரை) திருத்தொண்டில் - முன் சிலந்தியாயிருந்து செய்த திருத்தொண்டின்
பயனாலே; திருத்தொண்டுடனே ஆட்சியும் புரிந்து என்று கூட்டியுரைத்தனர் முன்
உரைகாரர்,