பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்532

 


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

69. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (11)
 

வகை
 

தனையொப் பருமெருக் கத்தம் புலியூர்க் தகும்புகழோன்
நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனைநீள்
சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந் தமிழொடிசை
புனையப் பரனருள் பெற்றன னென்பரிப் பூதலத்தே.

- திருத்தொண்டர் திருவந்தாதி - (83)
 

விரி
 

4215. எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவ ரிறைவன் றன்சீர்
திருத்தகும் யாழி லிட்டுப் பரவுவார் செழுஞ்சோ ணாட்டில்
விருப்புறு தான மெல்லாம் பணிந்துபோய் விளங்கு கூடற்
பருப்பதச் சிலையார் மன்னு மாலவாய் பணியச் சென்றார்.       1
 
     புராணம் :- இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், பன்னிரண்டாவது
மன்னியசீர்ச் சருக்கத்துள், ஐந்தாவது திருநீலகண்ட யாழ்ப்பாணனார் புராணங்கூறத்
தொடங்குகின்றார். திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரது வரலாறும் பண்புங் கூறும்
பகுதி.
 
     தொகை :- இதன் பொழிப்பு உரைத்துக்கொள்க.
 
     திருநீலகண்டர் என்பது இந்நாயனாரின் இயற்பெயர்; பாணனார் - என்பது
அவரது திருமரபின் பெயர்; இப்பெயருடன் (குயவனார் ) முன்னம் ஒரு நாயனார்
போற்றப்பட்டமையால், அவரினின்றும் வேறுபிரித்துணர்தற் பொருட்டு, மரபுடன்
சேர்த்துத் திருநீலகண்டத்துப் பாணனார்க் கடியேன் என்றார்; இக்கருத்தேபற்றி
முன்னர்க் குயவனார்கடியேன் என்றதூஉமென்க - பெயரும் மரபும் தொகைநூல்
உணர்த்திற்று.
     வகை :- தனை.....புகழோன் - தனக்கொப்பில்லாத திருஎருக்கத்தம்புலியூரில்
வந்தவதரித்த பெரிய புகழினை உடையவராகிய; நினை ஒப்பரும்.......பாணனை -