(4) இங்கு யாழ்ப்பாணருக்குத் திருவாலவாயுடையாரும் திருவாரூரிறைவரும் செய்த பேரருள்களின் திறம் இவ்வாற்றால் வைத்துணர்தற்பாலது. கண்ணப்பர் - திருநாளைப்போவார் வரலாறுகளும் இங்கு வைத்து ஒப்புநோக்கிச் சிந்திக்கற் பாலன. |
(5) சிவபெருமானது புகழ்கள் மறக்கருணை அறக்கருணை - (நிக்கிரக அநுக்கிரகங்கள்) கோபப்பிரசாதம் - என்றிவ்விரண்டு திறத்துள் வைத்து வரலாறுகள் பற்றித் துதிக்கற்பாலன. |
(6) பரமாசாரியரது திருவடிகளை அடைந்து அவரருள் பெற்றோர் பரமன் திருவடி சேர்ந்து மீளா நெறி பெற்றுய்வர். (4225) |
(7) மறையவர் பெருமானாகிய ஆளுடையபிள்ளையாரது திருக்கூட்டத்துடன் சேர்ந்து உடனிகழ்ந்து முத்திபெறும் பேறு திருநீலகண்ட யாழ்ப்பாணனார் பெற நேர்ந்தநிலை முன்னைத் தவமுதிர்ச்சியால் அன்பு மேலிட்டு ஒன்றுபட்ட முறை பற்றியதாகும். |
69. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார் புராணம் முற்றிற்று |