உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
70. சடைய நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “என்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன் இசைஞானி காதலன் றிருநாவ லூர்க்கோன்” | |
- திருத்தொண்டத் தொகை - (11) |
வகை |
| தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னிற் சடையனென்னுங் குலம்விளங் கும்புக ழோனை யுரைப்பர் குவலயத்தின் நலம்விளங் கும்படி நாம்விளங் கும்படி நற்றவத்தின் குலம்விளங் கும்படி யாரூ ரனைமுன் பயந்தமையே” | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (84) |
விரி |
4227. | தம்பி ரானைத் தோழமைகொண் டருளித் தமது தடம்புயஞ்சேர் கொம்ப னார்பா லொருதூது செல்ல வேவிக் கொண்டருளும் எம்பி ரானைச் சேரமான் பெருமா ளிணையில் துணைவராம் நம்பி யாரூ ரரைப்பயந்தார் ஞால மெல்லாங் குடிவாழ. 1 |
புராணம் ;- இனி, நிறுத்த முறையானே, பன்னிரண்டாவது மன்னியசீர்ச் சருக்கத்துள் ஐந்தாவது சடைய நாயனாரது புராணங்கூறத் தொடங்குகின்றார்; சடைய நாயனாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி. |
தொகை ;- எமது பிரானாகிய சிவபெருமான் றிருவடிகளையே அடைந்திட்ட சடைய நாயனாருக்கும் இசைஞானியாருக்கும் காதலனாகி வந்த திருநாவலூர்த் தலைவனாகிய அடியேன். |
என்னவன் - எனது தலைவராகிய அவன்; அவன் - இவன் - என்பன மகாவாக்கியப் பொருள் குறித்தன; (சிவஞா); அவன் - தற்பதப் பொருளாயுள்ளவன்; என்னை ஆளாக உடையவன்;அடியே - ஏகாரம் பிரிநிலை; வேறொருவருக்கும் ஆளாயடையாதவர்; இதனை “நிலவும் பணியு மணிந்தாரருள் பெற்ற........சடையனார்” (4226) என ஆசிரியர் முன்னர் விரித்தருளினர்; அடைதல் - புகலாகச் சார்தல்; இங்கு நம்பிகள் தம்மைச் சடையனார் - இசைஞானியார் - இவர்களின் காதலன் என்று அறிவிக்கும் வகையால் அவர்களைத் துதிக்கும் திறம் காண்க. இது பற்றியே நம்பி |