பக்கம் எண் :

மன்னியசீர்ச் சருக்கம்550

 


சிவமயம்
திருச்சிற்றம்பலம்
 

71 . இசைஞானி யம்மையார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

“என்னவனா மரனடியே யடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் றிருநாவ லூர்க்கோன்”

- திருத்தொண்டத் தொகை - (11)
 

வகை
 

பயந்தாள் கறுவுடைச் செங்கண்வெள் ளைப்பொள்ள னீள்பனைக்கைக்
கயந்தா னுகைத்தநற் காளையை யென்றுங், கபாலங்கைக்கொண்
டயந்தான் புகுமர னாரூர்ப் புனித வரன்றிருத்தாள்
நயந்தா டனதுள்ளத் தென்று, முரைப்பது ஞானியையே”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (85)
 

விரி
 

4228.   ஒழியாப் பெருமைச் சடையனா ருரிமைச் செல்வத் திருமனையார்
அழியாப் புரங்க ளெய்தழித்தா ராண்ட நம்பி தனைப்பயந்தார்
இழியாக் குலத்தி னிசைஞானிப் பிராட்டி யாரை யென்சிறுபுன்
மொழியாற் புகழ முடியுமோ முடியா தெவர்க்கு முடியாதால்.      1
 
     புராணம் ;- இசைஞானியம்மையாரது வரலாறும் பண்பும் கூறும் பகுதி.
பன்னிரண்டாவது, மன்னியசீர்ச் சருக்கத்துள், ஆறாவது, இசைஞானியம்மையார்
புராணங்கூறுகின்றார்; இசைஞானி - எடுத்துரைக்கப்படும் புகழ்களையுடைய ஞானி
என்ற பெயருடையவர்.
 
     தொகை ;- இசைஞானி யம்மையாருடைய மகனார் திரு நாவலூர்த் தலைவராகிய
நம்பியாரூரர்.
 
     வகை ;- பயந்தாள் கறுவுடை.....காளையை என்றும் - கறுவுதற் பண்பும்,
 செங்கண்ணும், வெள்ளை நிறமும், துளையுடைய நீண்ட பனைபோன்ற கையும், ஆகிய
இவற்றையுடைய யானையினை மேல்கொண்டு திருக்கயிலைக்குச் செலுத்திய காளையைப்
பெற்றெடுத்தவ ரென்றும்; கபாலம்......உள்ளத்து என்றும் - பிரமகபாலத்தினைக் கையில்
 ஏந்திப் பலிஏற்கும் அரசனாரும், திருவாரூரில் எழுந்தருளிய புனிதரும், ஆகிய
இறைவரது திருவடிகளைத் தன்னுள்ளத்து விரும்பி வைத்துள்ளவர் என்றும்;