என்பது குறிப்பு. பயன் - பயம்; இழியாக்குலம் - சிவன்படைப்பில் வந்தமை குறிப்பு; “தானெனை முன்படைத்தான்” (நம்பி). |
ஆண்ட - தடுத்தாட் கொண்டருளிய; பயந்தாரும் இழியாக்குலத்தில் வந்தவருமாகிய இசை ஞானிப் பிராட்டியாரை என்க. |
என்.......முடியுமோ? - புகழ்தல் எனது சிறு சொல்லளவிற் படுமோ? படாது. என்றபடி. எவர்க்கும் - எனக்கேயன்றி மற்று எவருக்கும் என்று இறந்தது தழுவிய எச்சவும்மை. |
சரிதச்சுருக்கம் - இசைஞானியம்மையார் புராணம் ;- இசைஞானி யம்மையார் உலவாத பெருமையினை யுடைய சடைய நாயனாரது உரிமைத் திருமனைவியார்; சைவ முதல்வராகிய ஆளுடைய நம்பிகளைப் பெற்ற பெருமையினை உடையவர்; திருவாரூர் இறைவரது திருவடிகளை என்றும் மறவாத மனமுடையவர். அவரது புகழ்களைக் கூறுதல் எவராலும் இயலாது. |
கற்பனை :- (1) நன்மக்கட்பேறு இல்லறத்தின் நன்கலமாம். |
(2) தமது இல்லறத்துக்கே யன்றி உலகமெல்லாம் உய்யச் செய்யவல்ல மகனாரைப் பெறுதல் தாயர்செய்த பெருந்தவமும் புகழுமாம். |
(3) அவ்வாறு பெற்ற தாயரைப் புகழ்தல் எவர்க்குமரிது. |
71. இசைஞானி யம்மையார் புராணம் முற்றும் _ _ _ _ _ |
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
சந்தரமூர்த்தி நாயனார் துதி |
தொகை |
| அன்னவனா மாரூர னடிமைகேட் டுவப்பார் ஆரூரி லம்மானுக் கன்பரா வாரே” | |
- திருத்தொண்டத்தொகை - (11) |
வகை |
| ஞானவா ரூரரைச் சேரரை யல்லது நாமறியோம் மானவ வாக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண் வானவ ராலு மருவற் கரிய வடகயிலைக் கோனவன் கோயிற் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே (86) | |
_ _ _ _ _ |
திருத்தொண்டத் தொகைத் தனியடியார்களும் தொகையடியார்களும் |
| கூட்டமொன் பானோ டறுபத்து மூன்று தனிப்பெயரா யீட்டும் பெருந்தவத் தோரெழு பத்திரண் டாம்வினையை |