பக்கம் எண் :

வெள்ளானைச் சருக்கம்568

 

     உமிழ்ந்த பிள்ளைதனை - மறலிமைந்தன் உயிர் உடலின் வளர்ச்சியுடன்
முதலை வாயிற் றருவித்தான் என்ற மட்டில் முன்பாட்டில் கூறிய ஆசிரியர், அது
அவனை உமிழ்ந்த செயலை வேறு கூறாது உமிழ்ந்தபிள்ளை என்றதனாற்
பெறவைத்தார்.
 

     உமிழ்ந்தது - அவ்வாறு உமிழ்ந்த என்று பிரித்துரைத்துக்கொள்க. பெற்றோரது
சோகத்தை விரைவில் போக்கவந்த வரலாற்றின் விரைவுக்கேற்பச் சொற்சுருக்கம் படக்
கூறியது கவிநயம். மறலிமைந்தனைத் தருவித்த செயல் கூறும் சுருக்கமும்
இக்கருத்துப்பற்றியது. இனி, மேல்வரும் உவகை நிகழ்ச்சி கூறும் விரிவை இவற்றுடன்
ஒப்பு நோக்குக.
 
     உருகாநின்ற தாய் ஒடி எடுத்துக்கொடுவந்து - வீழ்ந்தாள் - தந்தையினும்
தாயின் அன்பு மிகுந்த நிலை குறித்தது. வீழ்ந்தாள் - தன் செயலற்ற நிலையில்
வீழ்ந்த குறிப்பு; எடுத்துக்கொடுவந்து - மைந்தன் இவ்வரலாறு அறியானாதலால்
அவனையும் உடன் பணியச் செய்யும் நிலைபற்றி அவனைத் தாய் தானே
எடுத்துக்கொண்டுவந்து சேவடியில் விழுத்தி வீழ்ந்தாள். சீலமறையோனொடு -
வீழ்ந்தாள்
- மறையோன் விழுந்ததும் மனைவி விழுந்ததும் உடன் ஒருங்கே
நிகழ்ந்தன என்பது; சீலம் - சைவசீலம்; இது முன் (4235 - 4237) உரைக்கப்பட்டது;
இதுவே நம்பிகளது திருவருள் பெறக் காரணமாய் நின்றமையால் அதனை எடுத்துக்
கூறினார்; அருள் பெறக் காரணமாகிய சீலம் என்க.
 
     வீழ்ந்தாள் - என்றமையால் மறையோன் - மகன் - மனைவி மூவரும்
வீழ்ந்தாராயினும் இதனுள் அவ்வம்மை செயலே மிக்கிருந்தது என்பார் அவள் செயலாக
வீழ்ந்தாள் என முடித்தருளினர்.“தானுந்தன் தையலுந்தாழ் சடையோ னாண்டிலனேல்”
(திருவா).
 
     தரு - தேவமரங்கள்; மந்தாரம் முதலியன.
 
     உயிரளித்த திருவாளன் - நம்பிகள்; திருவாளன் - சைவத் திருப் பெற்றவர்;
“திருவாளன் றிருநீறு” (1332) என்றபடி சிவபெருமான் ஒருவரே திருவாளரெனப்படுவார்;
“திருவுடையார்” (நம்பி - பூவணம் - இந்தளம் 1); அவரேயனையவராதலின் நம்பிகளும்
திருவாளன் எனப்பட்டார். அன்றியும், உயிரளித்தல் - இறைவர் செய்யும்
ஐந்தொழிலினுட்பட்ட தொன்றாய், இங்கு அவரருளால் தாம் செய்யும் தன்மைகளையும்
இவர்பாலாக்கி யிட்ட நிலையும் கருதுக.                               12
 
4241. மண்ணி னுள்ளா ரதிசயித்தார்; மறையோ ரெல்லா முத்தரியம்
விண்ணி லேற விட்டார்த்தார்; வேத நாத மிக்கெழுந்த;
தண்ண லாரு மவிநாசி யரனார் தம்மை யருமறையோன்
கண்ணின் மணியாம் புதல்வனையுங் கொண்டு பணிந்தார் காசினிமேல்.

 
     (இ-ள்) மண்ணில் உள்ளார் அதிசயித்தார் - நிலவுலகிலுள்ள மக்கள் அதுகண்டு
அதிசயித்தனர்; மறையோர்....ஆர்த்தார் - மறையவர்கள் எல்லாரும் உத்தரியங்களை
ஆகாயத்தில் மேலே வீசி ஆர்த்தனர்; வேத...எழுந்தது - வேத ஒலி மிக எழுந்தது;
அண்ணலாரும்.....காசினிமேல் - பெருந்தகையாரான நம்பிகளும் அவி
___________________
     அவன் உயிர் பிழைத்தனன். அவன் சொல்லிய வரலாறு இது. அவன் உடலில்
முதலையின் பற்களால் முதலை விழுங்கியபோதும் பற்றும்போதும் உளவாகிய கீறல்
புண்கள் மட்டும் கண்டன. அவை நாளடைவில் ஆறிவிட்டன என்பது. இச் செய்தி
பத்திரிகைகளிலும் வெளி வந்தது.