பக்கம் எண் :

பெரியபுராணம்569

 

நாசியாகிய சிவபெருமானை அரிய மறையோனது கண்மணிபோன்ற மகனையுங்
கொண்டுசென்று உலகில் பணிந்தனர்.
 

     (வி-ரை) உத்தரியம்....ஆர்த்தார் - உத்தரியத்தை ஆகாயத்தில் வீசி ஆர
வாரித்தல் மகழ்ச்சி காட்டும் செயல்களுள் ஒன்று; இது வேதியர்கள் முதலிய
உயர்ந்ததோர்பால் மிக்கு வழங்குவதொரு மரபு; மறையோ ரெல்லாம் என்றது காண்க.
“தாமறுவை யுத்தரியந் தனிவிசும்பி லெறிந்தார்க்கும் தன்மை” (1993). களிப்பினால் சிறு
துணிகளை மேல் விரி ஆரவாரிக்கும் வழக்கு இந்நாளிலும் நிகழ்வது.
 
     வேதநாதம் மிக்கு எழுந்தது - ஒலிப்பவரின்றியே வேத முழக்கம் கேட்பது ஒரு
நன்னிமித்தம் என்பது (1929); வேதியர் வேதம் ஓதினர் என்றலுமாம்.
 
     அண்ணலார் - நம்பிகள்; புதல்வனையுங் கொண்டு பணிந்தார் - சிவன்
அருளால் உயிர் பெற்று வந்தமை குறித்துப் புதல்வனைக்கொண்டு பணியச் செய்தார்;
தமக்கு அருளியமை குறித்து உடன் திருமுன் சென்று பணிந்தார். முன் 4239ல்
உரைத்த நிலையும் கருதுக.
 
     கண்ணின் மணியாம் - அருளால் மீள உயிர் பெற்றுவந்த அருமைப்பாடு
குறித்தது. மணிஆம் - ஆம் - ஆக்கச் சொல் உவமம் குறித்தது.
 
     பணிந்தார் - மறையோர் முதலியோர் தமது கழல்பணிய, அந்நிகழ்ச்சி
இறைவரது செயலாதல் பற்றி அவரைப்பணிந்தார் என்பதாம். “எவ்வுயிர்க்குங்,
காவலனார் பெருங்கருணை கைதந்த படிபோற்றிப், பாவலர்செந் தமிழ்பாடிப்
பன்முறையும் பணிந்தெழுவார்” (3016) என்ற ஆளுடைய பிள்ளையார் சரிதம் இங்கு
நினைவு கூர்தற்பாலது.                                            13
 
4242. பரவும் பெருமைத் திருப்பதிகம் பாடிப் பணிந்து போந்தன்பு
விரவு மறையோன் காதலனை வெண்ணூல் பூட்டி யண்ணலார்
முரச மியம்பக் கலியாண முடித்து, முடிச்சே ரலர்தம்பாற்
குரவ மலர்ப்பூந் தண்சோலை குலவு மலைநா டணைகின்றார் .       14
 
4243. சென்ற சென்ற குடபுலத்துச் சிவனா ரடியார் பதிகடொறு
நன்று மகிழ்வுற் றின்புற்று நலஞ்சேர் தலமுங் கானகமுந்
துன்று மணிநீர்க் கான்யாறுந் துறுகற் சுரமுங் கடந்தருளிக்
குன்ற வளநாட் டகம்புகுந்தார் குலவு மடியே னகம்புகுந்தார்.         15
 
     4242. (இ-ள்) பரவும்....போந்து - துதிக்கின்ற பெருமையுடைய
திருப்பதிகத்தினைப்பாடித் திருக்கடைக் காப்புச் சாத்தி வணங்கிப் புறம்போந்து;
அன்பு....முடித்து - பெருமையுடைய நம்பிகள் (தம்பால்) அன்பு பொருந்திய வேதியனது
மகனைப் பூணூல் அணிவித்து முரசங்கள் சத்திக்க உபநயன மங்கலம் முடித்து;
முடிச்சேரலர் தம்பால்....அணைகின்றார் - முடிமன்னராகிய சேரனாரிடத்துச் சேர்வதற்கு,
நறுமணமுடைய மலர்கள் நிறைந்த அழகிய குளிர்ந்த சோலைகள் நிறைந்த மலை
நாட்டில் அணைகின்றாராய்,                                        14
 
     4243. (இ-ள்) குலவும்.....அகம்புகுந்தார் - அடியேனுடைய விளங்கிய உள்ளத்திற்
குடிபுகுந்தவராகிய நம்பிகள்; சென்ற....இன்புற்று - மேற்றிசையில் உள்ள நாட்டில்
போயின அங்கங்கும் சிவனாரடியார் பதிகள்தோறும் மிகவும் மகிழ்ந்து இன்பம்
அடைந்து; நலம்........கடந்தருளி - நன்மை பொருந்திய தலங்களையும்,