பக்கம் எண் :

(வார்கொண்ட வனமுலையாள் சருக்கம் - II)6

பாலை - குறிஞ்சி - யிரண்டற்கும் யானை கருப்பொருளாதல் பற்றிக் களிற்றுக்கன்று
வடிக்கும் ஒலி
என்று முன்கூறிய குறிப்பும் காண்க.
 
     வேலை ஒலி - வேலை இந்நகரினைச் சூழ்ந்த மேல்கடல்; “மலைக்குநிக
ரொப்பன வன்றிரைகள் வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண், டலைக்குங் கடலங்
கரைமேன் மகோதை யணியார்பொழி லஞ்சைக்களம்” (தேவா); ஒலி - ஒலியினையும்;
உயர்வு சிறப்பும்மை தொக்கது; இக்கடல் ஒலியின் மிகுதிபற்றி தேவாரத்துட் காண்க.
 

     விளங்கிப் பொங்கும் - என்பதும் பாடம்.                         2
 

3750. மிக்க செல்வ மனைகடொறும் விழையு மின்பம் விளங்குவன;
பக்க நெருங்கு சாலைதொறும் பயில்சட் டறங்கள் பல்குவன;
தக்க வன்பர் மடங்கடொறுஞ் சைவ மெய்ம்மை சாற்றுவன;
தொக்க வளங்கொ ளிடங்கடொறு மடங்க நிதியந் துவன்றுவன.          3
 
     (இ-ள்) மிக்க...விளங்குவன - செல்வமிக்க வீடுகள் தோறும் விழைகின்ற இல்லற
இன்பங்கள் விளக்கம் பொருந்தியன; பக்கம்....பல்குவன - மனைகளின் பக்கங்களில்
நெருங்கிய சாலைகள் தோறும் செய்யப்படுகின்ற செப்பமாகிய அறங்கள் பெருகுவன;
தக்க...சாற்றுவன - தகுந்த அன்பர்கள் வாழும் திருமடங்கள் தோறும் சைவத்தின்
உண்மைப் பொருள்கள் எடுத்துக் கூறப்படுவன; தொக்க...துவன்றுவன - தொகுதியாகக்
கூடிய வளங்களைத் தம்மிடத்துக் கொள்கின்ற இடங்கள் தோறும் நிறம்பிய நிதியங்கள்
தோன்றுவன.
 

     (வி-ரை) இன்பம் - அறங்கள் - சைவமெய்ம்மை - நிதியம் - இப்பாட்டில்
அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கும் அந்நாட்டின்
விளங்கும் நிலையினைக் கூறிய கவிநலம் கண்டு கொள்க; நிதியம் - பொருள்;
சைவமெய்ம்மை - வீடு.
 

     இன்பம் - அறம் - (வீடு) சைவமெய்ம்மை - பொருள் என்று இம்முறையில்
வைத்தார். உயிர்கள் எல்லாம் விழைவதும் விழையத் தக்கதும் இன்பமே யாதலின் அது
முதற்கண் வைக்கப்பட்டது. அவ்வின்பந்தானும் அறத்தின் வழி வருதலும் துய்த்தலும்
படுவதாதலின் அறம் அதனை அடுத்து வைக்கப்பட்டது; “அறத்தான் வருவதே
இன்பம்” (குறள்); அழியா இன்பமாகிய பேரின்ப வீடு அதன்பின் வரும் முறைபற்றி
அதனை அடுத்துக் கூறினார்; “முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும்”
“நடுவண தெய்த விருதலையும் எய்தும்” என்றபடி அறத்திற்கும் இன்பத்துக்கும்
வீடுகாட்டும் திருமடங்களுக்கும் ஒரு வகையால் சாதனமாய் நிற்பது பொருள் என்ப
வாதலின் காரிய காரண முறையால் இறுதிக்கண் வைத்துக் கூறினார்; அன்றியும், இங்கு
நகரச் சிறப்பாகிய நகர வளங் கூறுதலே முறையும் கருத்துமாதலின் அம்முறை பற்றி
முடித்துக் கூறும் வகையால் தொக்கவளங்கொள் என்று இறுதியில் வைத்த கருத்துமாம்.
இடங்கள்
- முன்கூறிய மூவகையிடங்களையும் குறிப்பாலுணர்த்துதலும் காண்க.
இவ்வாறன்றி, இதனை அடிமாற்றும் ஓர் பொருள் கோளாய் நின்றதென்று கொண்டு
அதற்கேற்ப அடிகளை மாற்றிப் பொருள் கொண்டனர் ஆறுமுகத் தம்பிரானார்.
அடிமறி மண்டில ஆசிரியமுமாம்.
 
     செல்வ மனைகள் - செல்வம் - அறத்தாற்றின் ஈட்டப்பட்டதாய் வருவது. “தம்
பொருள் என்ப தம்மக்கள்” (குறள்) என்றபடி, செல்வம் - நன்மக்களுடைமை
என்றலுமாம். தொறு - இடம் காலங்களின் இடையீடின்மை தரும் இடைச்சொல்.