நகரில்தோன்றிய மறைவல்ல ஞானசம்பந்தன்
உரைத்த ஒப்பற்ற தமிழ்மாலைகளாகிய இப்பதிகப்
பாடல்கள் பத்தையும் இசையோடு பகர்ந்து வழிபடும்
அடியவர்களைத் துன்பங்களும் அவற்றைத் தரும் பாவங்களும்
அடையா.
கு-ரை: நிகரில்லன
தமிழ்மாலை என்றார்; ஒவ்வொரு திருப்பாடலின் முதலிரண்டடிக்
கண்ணும் இறைவன் ஆன்மாக்களின் மலத்தைநீக்கி ஆட்கொள்ளும்
முறைமையும், உபதேச குருமூர்த்தியாய் வந்தருளும் சிறப்பும்,
தானே முதல் என உணர்த்தும் தகுதியும் உணர்த்திப்
பின்னிரண்டடிகளிலும் இயற்கையழகுகளின் வழியாக
இறைவளத்தை யுணர்த்துதலின். இடர் - பாவம்.