பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)87. திருநள்ளாறு1071

3740. கார்மலி நெறிபுரி சுரிகுழன்
       மலைமகள் கவினுறு
சீர்மலி தருமணி யணிமுலை
     திகழ்வொடு செறிதலின்
தார்மலி நகுதலை யுடையநள்
     ளாறர்தந் நாமமே
ஏர்மலி யெரியினி லிடிலிவை
     பழுதிலை மெய்ம்மையே.               7

3741. மன்னிய வளரொளி மலைமகள்
       தளிர்நிற மதமிகு
பொன்னியன் மணியணி கலசம
     தனமுலை புணர்தலின்


துதைலின் - நெருங்கியிருத்தலால். தாது உறும் நிறம் உடை - பொன்போலும்
நிறம் உடைய அடிகள். “பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து”
(தி.4.ப.81.பா.9.) அடிகளாகிய நள்ளாறர்.

     7. பொ-ரை: அடர்த்தியான, பின்னப்பட்ட, சுருண்ட கார்மேகம்
போன்ற கருநிறமான கூந்தலையுடைய மலைமகளான உமாதேவியின்
அழகிய, சிறந்த மணிகள் பதிக்கப்பட்ட ஆபரணம் அணிந்த முலைகளோடு
நெருங்கியிருக்கும், மண்டையோட்டை மாலையாக அணிந்துள்ள
திருநள்ளாற்று இறைவனின் திருநாமத்தைப் போற்றும் திருப்பதிகம்
எழுதப்பட்ட ஏடுகளை எழுச்சியுடன் எரியும் இந்நெருப்பிலிட்டால் அவை
பழுதில்லாதனவாகும் என்பது சத்தியமே.

     கு-ரை: கார்மலி - மேகம் போன்ற. மலி - உவமவாசகம், நெறி,
செழிப்புடைய. புரி - கட்டப்பட்ட. சுரி - சுரிந்த (குழல் மலைமகளின்) நகு
வெண்டலையைச் சிறந்த மாலையாகவுடைய நள்ளாறர்தம் நாமமே.

     8. பொ-ரை: நிலைபெற்று வளரும் ஞானவொளி பிரகாசிக்கும்
மலைமகளான உமாதேவியின் தளிர்நிறத்தனவாய் மான்மதமாகிய கத்தூரியை
அணியப்பெற்றனவாய், இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பொன்னாலான
ஆபரணத்தை அணிந்துள்ளனவாய், கலசத்தை