3754. |
ஒள்ளியர்
தொழுதெழ வுலகினி லுரைசெயு |
|
மொழிபல
கொள்ளிய களவினர் குண்டிகை யவர்தவ
மறிகிலார்
பள்ளியை மெய்யெனக் கருதன்மின் பரிவொடு
பேணுவீர்
வெள்ளிய பிறையணி சடையினர் வளநகர்
விளமரே. 10 |
கண்டத்தை உடையவர்.
இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,
வண்டினங்கள் விரிந்த மலர்களைக் கிண்டி நல்ல தேனை ஒலியுடன் பருகும்
சோலைகளை உடைய திருவிளமர் என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
தொண்டு - சிவனுக்கு அடிமை பூணும் திருத்தொண்டின்
நிலையே. அசைவு உற - அழிய. வரு - மார்க்கண்டேயர் மேல் வந்த. துயர்
உறு - துன்பம் உறுத்தவரும் (காலனை). தொண்டு அசைவு உற என்ற
கருத்து. சிவனடியார்க்கு ஒருவர் தீங்கிழைப்பரேல் அது அடிமைத்
திறத்தையே அழிப்பதாகும் என்பதாம். அது:- என் போலிகளும்மையினித்
தெளியார் அடியார் படுவதிதுவே யாகில், அன்பேயமையும் என்பதாற்
கொள்க. (தி.4. ப.1.பா.9) காலனை மாள்வுறச் (செய்து) பின், அண்டல் செய்து
- தன்னையண்டித் தன் ஆணைவழி நிற்றலையும் செய்து, இங்குச் செய்து
என்பதனைப் பின்னும் கூட்டுக. அண்டல், அண்டுதல், அண்டி வாழ்தல் எச்ச
உம்மை வருவித்துரைக்க. துயர் உறு என்பதில் பிறவினை விகுதி தொக்கு
நின்றது. மேல்வெருவுற என்பதும் அது. இருவரை - பிரம விட்டுணுக்களாகிய
இருவரையும். வெருவுற - அஞ்சுவிக்க. ஆர் அழல் ஆயினான் -
காண்டற்கரிய அழல் வடிவு ஆயினவன். இருவர் என்பது தொகைக் குறிப்பு.
கொண்டல் செய்தரு - மேகம்போலும் கரிய. திருமிடற்றினர் - அழகிய
கண்டத்தை யுடையவர். அளியினம் - வண்டின் கூட்டங்கள். விண்டு இசை
உறு - ஒலியை வெளிப்படுத்திப் பாடுதலையுடைய. (மலர்) நறு மது விரி -
நல்ல தேனைப் பெருகச் சொரிகின்ற பொழில்.
10.
பொ-ரை: உலகத்து அறிவுடையார்களால் வணங்கி ஏத்துதற்குரிய
மதங்கள் பல உண்டு. வடமொழி, தமிழ் முதலிய பல மொழிகளிலுமுள்ள
உயர்ந்த பொருள்களைக் களவுசெய்து தம்மதாகக்
|