|
பதிக வரலாறு:
வானநாயகர் திருமுதுகுன்றினை
வலங்கொண்டு தேனலம்பு தண்கொன்றையார்
சேவடி பரவித் தாழ்ந்து எழுந்து சாத்திய தண்டமிழ்த் தொடை இது.
திருமுக்கால்
பண்:சாதாரி
திருச்சிற்றம்பலம்
| 3864.
|
முரசதிர்ந்
தெழுதரு முதுகுன்ற மேவிய |
| |
பரசமர்
படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்க ளுலகிலா வாரே. 1 |
| 3865.
|
மொய்குழ
லாளொட முதுகுன்ற மேவிய |
| |
பையர
வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறு நலமே. 2 |
1.
பொ-ரை: பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு அதிர்ந்து
பேரோசை ஏழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய சிவபெருமானே!
மழுப்படையையுடைய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில்
அரசர்கள் ஆவர்
. கு-ரை:
பூசை - விழாக்காலங்களில் முரசு அதிர்ந்து ஓசை எழுப்பும்
முதுகுன்றம் மேவிய பரசு படை - மழுவாகிய ஆயுதம் பெயரொட்டு. அமர்
- பொருந்திய. உலகில் அரசர்கள் ஆவர். இடைப்பிறவரல். பல நாடுகளுக்கு
அரசர் ஆவதால் பன்மையாற் கூறினர்.
2.
பொ-ரை: அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு
திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
பாம்பைக் கச்சாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானே!
|