பக்கம் எண் :

1160திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

99. திருமுதுகுன்றம்

பதிக வரலாறு:

வானநாயகர் திருமுதுகுன்றினை வலங்கொண்டு தேனலம்பு தண்கொன்றையார்
சேவடி பரவித் தாழ்ந்து எழுந்து சாத்திய தண்டமிழ்த் தொடை இது.

திருமுக்கால்
பண்:சாதாரி

ப.தொ.எண்:357 பதிக எண்:99

  திருச்சிற்றம்பலம்

3864. முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
  பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்க ளுலகிலா வாரே.                    1

3865. மொய்குழ லாளொட முதுகுன்ற மேவிய
  பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறு நலமே.                  2


     1. பொ-ரை: பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு அதிர்ந்து
பேரோசை ஏழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய சிவபெருமானே!
மழுப்படையையுடைய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில்
அரசர்கள் ஆவர்

.      கு-ரை: பூசை - விழாக்காலங்களில் முரசு அதிர்ந்து ஓசை எழுப்பும்
முதுகுன்றம் மேவிய பரசு படை - மழுவாகிய ஆயுதம் பெயரொட்டு. அமர்
- பொருந்திய. உலகில் அரசர்கள் ஆவர். இடைப்பிறவரல். பல நாடுகளுக்கு
அரசர் ஆவதால் பன்மையாற் கூறினர்.

     2. பொ-ரை: அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு
திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
பாம்பைக் கச்சாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானே!