|  
       பதிக வரலாறு: வானநாயகர் திருமுதுகுன்றினை 
        வலங்கொண்டு தேனலம்பு தண்கொன்றையார் சேவடி பரவித் தாழ்ந்து எழுந்து சாத்திய தண்டமிழ்த் தொடை இது.
  
        திருமுக்கால் பண்:சாதாரி
   திருச்சிற்றம்பலம் 
         
          | 3864. | முரசதிர்ந் 
            தெழுதரு முதுகுன்ற மேவிய |   
          |  | பரசமர் 
            படையுடை யீரே பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
 அரசர்க ளுலகிலா வாரே.                    1
 |  
       
         
          | 3865. | மொய்குழ 
            லாளொட முதுகுன்ற மேவிய |   
          |  | பையர 
            வம்மசைத் தீரே பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
 நைவிலர் நாடொறு நலமே.                  2
 |  
       1. 
        பொ-ரை: பூசை, திருவிழா முதலிய காலங்களில் முரசு அதிர்ந்து பேரோசை ஏழுப்புகின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளுகின்ற மழுப்படையை உடைய சிவபெருமானே!
 மழுப்படையையுடைய உம்மைப் போற்றி வணங்குபவர்கள் உலகினில்
 அரசர்கள் ஆவர்
 .      கு-ரை: 
        பூசை - விழாக்காலங்களில் முரசு அதிர்ந்து ஓசை எழுப்பும் முதுகுன்றம் மேவிய பரசு படை - மழுவாகிய ஆயுதம் பெயரொட்டு. அமர்
 - பொருந்திய. உலகில் அரசர்கள் ஆவர். இடைப்பிறவரல். பல நாடுகளுக்கு
 அரசர் ஆவதால் பன்மையாற் கூறினர்.
       2. 
        பொ-ரை: அடர்ந்த கூந்தலையுடைய உமாதேவியோடு திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
 பாம்பைக் கச்சாக அரையில் கட்டியுள்ள சிவபெருமானே!
 |