| 
         
          | 3866. | முழவமம் 
            பொழிலணி முதுகுன்ற மேவிய |   
          |  | மழவிடை 
            யதுவுடை யீரே மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
 பழியொடு பகையிலர் தாமே.                  3
 |  
         
          | 3867. | முருகமர் 
            பொழிலணி முதுகுன்ற மேவிய |   
          |  | உருவமர் 
            சடைமுடி யீரே உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
 திருவொடு தேசினர் தாமே.                  4
 |  
  பாம்பைக் காச்சாகக் 
        கட்டியுள்ள உம்மை பாடுவார் எவ்விதக் குறையும் இல்லாதவர். நாள்தோறும் நன்மைகளையே மிகப்பெறுவர்.
       கு-ரை: 
        மொய்குழலாள் - அடர்ந்த கூந்தலையுடைய அம்பிகையோடு முதுகுன்றில் மேவிய அசைத்தருளினீர் என்க. அசைத்தல் - கட்டுதல். பை -
 பாம்பு. உம்மைப்பாடுவார் நாடோறும் நன்மைகள் குறைவின்றி மிகப்பெறுவர்.
 நைவு - குறைதல்.
       3. 
        பொ-ரை: முழவுகள் ஒலிக்கின்றதும், சோலைகளால் அழகு பெற்றதுமான திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி
 வீற்றிருந்தருளுகின்ற, இளமைவாய்ந்த இடபத்தை, வாகனமாகவும்
 கொடியாகவும் உடைய சிவபெருமானே! இளமைவாய்ந்த இடபத்தை
 வாகனமாகவும், கொடியாகவும் கொண்ட உம்மை வாழ்த்துபவர்கள் பழியும்,
 பாவமும் இல்லாதவர்கள் ஆவர்.
       கு-ரை: 
        முழவு அமர்முதுகுன்றம். பொழில் அணி முதுகுன்றம் என இயைக்க. மழவிடை - இளங்காளை. பகை - இங்குப் பாவம் என்னும்
 பொருளிள் வந்தது. பழிக்கு இனம் ஆகலின். எண்ணுங்காலும் அதுவதன்
 மரபே (தொல. சொல்.கிளவியாக்கம்.47.)
       4. 
        பொ-ரை: வாசனை பொருந்திய சோலைகள் அழகு செய்கின்ற திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
 அழகு பொருந்திய சடைமுடியினையுடையவரே! அழகு பொருந்திய
 சடைமுடியினை உடையவராகிய உம்மைப் போற்றி வணங்குபவர்கள்
 செல்வமும், புகழும் உடையவர்.
 |