3870. |
மொட்டலர்
பொழிலணி முதுகுன்ற மேவிய |
|
கட்டமண்
டேரைக்காய்ந் தீரே
கட்டமண் டேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே. 10 |
3871. |
மூடிய
சோலைசூழ் முதுகுன்றத் தீசனை |
|
நாடிய
ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே. 11 |
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: மொட்டுக்கள் மலர்கின்ற சோலைகளையுடைய அழகிய
திருமுதுகுன்றத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, கட்டுப்பாட்டினையுடைய
சமணர்களையும், புத்தர்களையும் கோபித்தவரான சிவபெருமானே!
சமணர்களையும், புத்தர்களையும் கோபித்த உம்மைத் தியானிப்பவர்கள்
சிறந்த அடியார்கள் பெறுதற்குரிய முத்திப்பேற்றினைப் பெறுவர்.
கு-ரை:
கட்டு அமண் - கட்டுப்பாட்டையுடைய அமணரோடு. தேர் -
தேரரை. கடைக்குறை. காய்ந்தீர் - கோபித்தருளிளீர். உம்மைக் கருதுவோரே
அன்பர்கள் பெறும் சிறப்பைப் பெறுதற்குரியராவர். செம்பொற் பாத
மலர்காணாப் பொய்யர் பெறும்பே றத்தனையும் பெறுதற் குரியேன்
என்பதன் எதிர்மறை.
11.
பொ-ரை: அடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருமுதுகுன்றம் என்னும்
திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் சிவபெருமானைத் திருஞான
சம்பந்தர் போற்றி அருளினார். அவ்வாறு திருஞானசம்பந்தர் போற்றியருளிய
இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுபவர்கள் பழியிலர் ஆவர்.
கு-ரை:
மூடிய சோலைசூழ் - மூடுவதுபோல் அடர்ந்தசோலை. பாடிய
அவர் பழியிலர் ஆவர் என்க.
|