| பதிக 
        வரலாறு:        தாளம் 
        பெற்ற சண்பைக் கோமான், திருத்தோணிமிசை மேவினார் திருமுன்பு தாழ்ந்தெழுந்து நின்று பாடிய தமிழ் வேதத்துள் ஒன்று
 இத்திருப்பதிகம்.
 ஈரடிபண்: 
        பழம்பஞ்சுரம்
 
         
          | ப.தொ.எண்: 
            368 |  | பதிகஎண்: 
            110 |  திருச்சிற்றம்பலம் 
         
          | 3978. | வரமதேகொளா 
            வுரமதேசெயும் |   
          |  | புரமெரித்தவன் 
            பிரமநற்புரத் தரனனாமமே பரவுவார்கள்சீர்
 விரவுநீள் புவியே.                     1
 |   
       
         
          | 3979. | சேணுலாமதில் 
            வேணுமண்ணுளோர் |   
          |  | காணமன்றலார் 
            வேணுநற்புரத் தாணுவின்கழல் பேணுகின்றவ
 ராணியொத் தவரே.                    2
 |  
      1.பொ-ரை: 
        தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது, தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த
 அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான். திருப்பிரமபுரம்
 என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி
 வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்றபூமி முழுவதும் பரவும்.
      கு-ரை: 
        வரம் அதே கொளா - வரம் பெற்ற பயனை அடையாமல், உரம் அதே செயும் - தங்கள் வலிமைக்குரிய தீங்கையே செய்த, திரி
 புரங்களை எரித்தவனாகிய பிரமபுரத்திலுள்ள சிவபெருமானின் புகழையே
 துதித்துப் போற்றும் அடியார்களின் பெருமை இவ்வகன்ற பூமிமுழுதும்
 பரவும் என்பது இப் பாட்டின் பொழிப்பு. 2.பொ-ரை: ஆகாயத்தை அளாவிய
 மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என
 மண்ணுலகத்தவர்
 |