பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)113. திருக்கழுமலம்1271

4022. கண்ணிகழ் புண்டரி கத்தினனே
       கலந்திரி புண்டரி கத்தினனே
மண்ணிக ழும்பரி சேனமதே
     வானக மேய்வகை சேனமதே
நண்ணி யடிமுடி யெய்தலரே
     நளிர்மலி சோலையி லெய்தலரே
பண்ணியல் கொச்சை பசுபதியே
     பசுமிக வூர்வர் பசுபதியே.             11


நிலைகெட்டு (பத்தி நிலையில் செல்ல). உடன்பாடினனே - அவனுடைய
பாடலுக்கு இறைவர் உடன்பட்டவராகி. இலங்கியமேனி இராவணன் -
விளங்கின உடம்பையுடைய இராவணனுக்கு. எய்தும் பெயரும் இராவணனே
- அதனால் உண்டான பெயரும் அழுதவன் என்பதாம். கலந்து
அருள்பெற்றதும் மாவசியே - அருளிற் கலந்து அவன் பெற்றதும் சிறந்த
வாளாயுதமாம். (வசி - வாள்) “வசி கூர்மை வசியம் வாளே” என்பது
நிகண்டு. காழி அரன் அடி, மாவசி - சிறந்த வசீகரத்தை உடையதாகும். வசி
- முத்திபக்ஷாரம் என செந்திநாதையர் உரைப்பர்.

     11. பொ-ரை: தாமரை போன்ற கண்களையுடைய திருமாலும்,
அவனோடு சேர்ந்து திரிந்த உந்திக் கமலத்தில் தோன்றிய பிரமனும்,
பூமியைத் தோண்டும் பன்றியாகவும், வானத்தில் பறக்கும் பருந்தாகவும் அடி,
முடி தேட முயன்று அடையாதவர் ஆயினர். குளிர்ச்சி மிக்க சோலைகளில்
உள்ள மலர்கள் சிவபூசை பண்ணப் பயன்படத் திருக்கொச்சை வயம்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார், உயிர்கட்கெல்லாம்
தலைவரான பசுபதி எனப்படும் சிவபெருமான். அவர் ஆனேற்றில்
ஏறுவதால் பசுபதி என்னும் பெயர் படைத்தவரும் ஆவார்.

     கு-ரை: கண் நிகழ் புண்டரிகத்தினனே - கண்ணானது பொருந்திய
தாமரையாக உள்ளவன்; தாமரைக் கண்ணனாகிய திருமாலும். கலந்து -
அவனோடு சேர்ந்து. இரி - திரிந்த. புண்டரீகத்தினன் - (உந்திக்கமலத்தில்
தோன்றியவனாகிய) பிரமனும். மண் நிகழும் பரிசு - பூமியைத் தோண்டும்
தன்மையை உடைய. ஏனம் அதே - பன்றியாகவும். வானகம் ஏய் -
ஆகாயத்தில் பறக்கின்ற. சேனம் அது - கழுகாகவும். பிரமன் வானிற்
பறக்க எடுத்த வடிவம் அன்னமாகவும் எமது ஆளுடையபிள்ளையார்
வானிற் பறக்கும் கழுகாகவே