|
திருஞானசம்பந்தர்
புராணம்
போத நீடுமா
மறையவர் எதிர்கொளப்
புகலிகா வலருந்தம்
சீத முத்தணிச் சிவிகைநின் றிழிந்தெதிர்
செல்பவர் திருத்தோணி
நாதர் கோயில்முன் தோன்றிட நகைமலர்க்
கரங்குவித் திறைஞ்சிப்போய்
ஓத நீரின்மேல் ஓங்கு கோயிலின்
மணிக்கோபுரஞ் சென்றுற்றார்.
அங்கம்
மாநிலத் தெட்டுற வணங்கிப்புக்
கஞ்சலி முடிஏறப்
பொங்கு காதலிற் புடைவலங் கொண்டுமுன்
பணிந்துபோற் றெடுத்தோதித்
துங்க நீள்பெருந் தோணியாங் கோயிலை
அருளினால் தொழுதேறி
மங்கை யோடுடன் வீற்றிருந் தருளினார்
மலர்க்கழல் பணிவுற்றார்.
-
சேக்கிழார்.
|