பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்159

பாண்டியன் வரகுணனின் சகோதரன் என்பதைச் சரித்திர நிகழ்ச்சிகள்
துணைக்கொண்டு அறிகிறோம்.

     மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந்தவர் என்று
வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) குரு சரிதம் கொண்டாடிய
பரம வைணவனாவான். அவன் பேரனான இரண்டாம் வரகுணன் (863-911)
சிறந்த சிவபக்தன் என்பதைப் பாண்டியர் செப்பேடுகளும், மாணிக்கவாசகரின்
திருக்கோவையாரும், பட்டினத்து அடிகளின் பாடல்களும், பாண்டிய
குலோதயா வடமொழிக் காவியமும் உறுதி செய்கின்றன. மாணிக்கவாசகர்
“வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்” என்றும், “சிற்றம்பலம்,
புகழும் மயல் ஓங்கு இருங்களியானை வரகுணன்” என்றும் நிகழ்காலத்தில்
வரகுணனைப் பற்றித் திருக்கோவையாரில் கூறுவது ஆய்வுக்கு அணி
கூட்டுகிறது.

     திருநாவுக்கரசுரும், திருஞானசம்பந்தரும், சுந்தரமூர்த்தி சுவாமிகளும்
வாழ்ந்த காலத்தில் தில்லை நடராஜப்பெருமான் ஆலத்திற்குள் திருமாலுக்கு
என்று திருமேனி இல்லை. தேவாரங்களில் தில்லையில் திருமால் வழிபாடு
இருந்ததாகக் கூறப்படவில்லை. பிற்காலத்தில் நந்திவர்மன் காலத்தில்
தில்லைத் திருச்சித்திர கூடம் எடுக்கப்பட்டது.

     இராஜசிம்மன் என்னும் இரண்டாம் நரசிம்மவர்மனின் மூத்த மகனாகிய
மூன்றாம் மகேந்திரவர்மன் இளமையில் இறந்தான். இரண்டாம் நரசிம்மவர்மன்
728 இல் காலமானான். அவனது இரண்டாம் மகனான பரமேஸ்வரவர்மன்
சில ஆண்டுகளே ஆட்சி புரிந்து மறைந்தனன். பரமேஸ்வரவர்மனுக்கு
வாரிசுகள் இல்லாததால், பல்லவரின் கிளையில் வந்த நந்திவர்மன் கி.பி. 730
இல் பன்னிரண்டாவது வயதில் முடிசூட்டப்பட்டான். இவன் 65 ஆண்டுகள்
ஆட்சிபுரிந்து 795இல் மறைந்தனன்.1 நந்திவர்மனின் காலத்தில்
வாழ்ந்தவர்கள் திருமங்கை ஆழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் ஆவர்.

     வைணவர்களின், குருபரம்பரை, திருமுதியடைவு ஆகியவைகளின்
கூற்றுப்படி திருமங்கையாழ்வார் கி.பி. 776இல் அவதரித்தவர். குலசேகர
ஆழ்வார் கி.பி. 767 இல் அவதரித்தவர்.2


     1 See Note 9 above. 2 For the dates of Alwars - See
Swamikannu Pillai. Indian Ephemeris Volume I Part I Page 489.