| 
         
          |  | வந்து 
            சேர்விடம் வானவர் எத்திசையுந் |   
          |  | நிறைந் 
            துவலஞ் செய்து மாமலர் புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றதுமே. 			1
 |  
       
         
          | 2813. | காவி 
            யங்கருங் கண்ணி னாள்கனித் |   
          |  | தொண்டை 
            வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத் தூவி யம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள்
 தேவி யும்திரு மேனியோர் பாகமாய்
 ஒன்றி ரண்டொரு மூன்றொடு சேர்பதி
 பூவி லந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே.    2
 |  
  தேவர்கள் எல்லாத் 
        திசைகளிலும் நிறைந்து, வலம் வந்து, மனத்தால், நினைந்து, உடலால், வணங்கி, சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர்.
 அத்தலத்தினை நாம் வணங்குவோமாக!
       கு-ரை: 
        பந்துசேர் விரலாள்-பந்து பொருந்திய விரலையுடையவள். பந்தணை விரலியும் நீயும் (திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி. 8) பந்தணை
 விரலாள் பங்க (வாழாப்பத்து 8) எனத் திருவாசகத்தில் வருதலும் காண்க.
 துவர்-செந்நிறம், பவளத்துவர் வாயினாள்-பவளம்போலும் செந்நிறம்
 பொருந்திய வாயையுடையவள். பனிமாமதி போன்முகத்து-குளிர்ச்சி
 பொருந்திய சிறந்த சந்திரனைப் போன்ற முகத்தையுடைய. அந்தம்
 இல்புகழாள்-அளவற்ற புகழையுடையவள். விரலாளும், வாயினாளும் ஆகிய
 அந்தமில்புகழாள். அளவில் புகழையுடையவள். உமாதேவியாரோடும்.
 ஆதி-சிவனுக்கொருபெயர் ஆதியே ... அருளாயே
 ஆதிப்பிரான்-பெயரொட்டு. சத்தியும் சிவமுமாய தன்மை ... வைத்தனன்
 அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம் என்பதால் (சித்தியார்
 சூ-ம்1-69) அந்தமில் புகழாள் என்றனர். வந்து, சேர்வுஇடம்-
 சேர்தலையுடையஇடம். புந்தி செய்து இறைஞ்சி-புந்தி மனம், இறைஞ்சி-
 வணங்கி, மனம்கூடாத வழிச் செய்கை பயன்தாராது ஆகலாற் புந்திசெய்து
 இறைஞ்சியென்றனர். செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாது
 (மணிமேகலை. மலர் வனம்புக்ககாதை -76-77.) எனப் பிறர் கூறுதலும்
 காண்க. வானவர் எத்திசையும் நிறைந்து வலஞ்செய்து இறைஞ்சி
 மாமலர்பொழி பூந்தராய் என்க. போற்றுதும்-வணங்குவோம்.
       2. 
        பொ-ரை: நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும், கொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும், ஒளிவீசுகின்ற முத்துப்போன்ற
 வெண்மையான பற்களையும், இறகுகளையுடைய பெண்
 |