பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)02. திருப்பூந்தராய்403

வந்து சேர்விடம் வானவர் எத்திசையுந்
       நிறைந் துவலஞ் செய்து மாமலர்
புந்தி செய்திறைஞ் சிப்பொழி பூந்தராய் போற்றதுமே. 1

2813. காவி யங்கருங் கண்ணி னாள்கனித்
       தொண்டை வாய்க்கதிர் முத்தநல் வெண்ணகைத்
தூவி யம்பெடை அன்னந டைச்சுரி மென்குழலாள்
தேவி யும்திரு மேனியோர் பாகமாய்
     ஒன்றி ரண்டொரு மூன்றொடு சேர்பதி
பூவி லந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே.    2


தேவர்கள் எல்லாத் திசைகளிலும் நிறைந்து, வலம் வந்து, மனத்தால்,
நினைந்து, உடலால், வணங்கி, சிறந்த மலர்களைத் தூவி வழிபடுவர்.
அத்தலத்தினை நாம் வணங்குவோமாக!

     கு-ரை: பந்துசேர் விரலாள்-பந்து பொருந்திய விரலையுடையவள்.
“பந்தணை விரலியும் நீயும்” (திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி. 8) “பந்தணை
விரலாள் பங்க” (வாழாப்பத்து 8) எனத் திருவாசகத்தில் வருதலும் காண்க.
துவர்-செந்நிறம், பவளத்துவர் வாயினாள்-பவளம்போலும் செந்நிறம்
பொருந்திய வாயையுடையவள். பனிமாமதி போன்முகத்து-குளிர்ச்சி
பொருந்திய சிறந்த சந்திரனைப் போன்ற முகத்தையுடைய. அந்தம்
இல்புகழாள்-அளவற்ற புகழையுடையவள். விரலாளும், வாயினாளும் ஆகிய
அந்தமில்புகழாள். அளவில் புகழையுடையவள். உமாதேவியாரோடும்.
ஆதி-சிவனுக்கொருபெயர் “ஆதியே ... அருளாயே”
ஆதிப்பிரான்-பெயரொட்டு. “சத்தியும் சிவமுமாய தன்மை ... வைத்தனன்
அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம்” என்பதால் (சித்தியார்
சூ-ம்1-69) அந்தமில் புகழாள் என்றனர். வந்து, சேர்வுஇடம்-
சேர்தலையுடையஇடம். புந்தி செய்து இறைஞ்சி-புந்தி மனம், இறைஞ்சி-
வணங்கி, மனம்கூடாத வழிச் செய்கை பயன்தாராது ஆகலாற் புந்திசெய்து
இறைஞ்சியென்றனர். “செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாது”
(மணிமேகலை. மலர் வனம்புக்ககாதை -76-77.) எனப் பிறர் கூறுதலும்
காண்க. வானவர் எத்திசையும் நிறைந்து வலஞ்செய்து இறைஞ்சி
மாமலர்பொழி பூந்தராய் என்க. போற்றுதும்-வணங்குவோம்.

     2. பொ-ரை: நீலோற்பல மலர் போன்ற கரிய கண்களையும்,
கொவ்வைக்கனிபோல் சிவந்த வாயினையும், ஒளிவீசுகின்ற முத்துப்போன்ற
வெண்மையான பற்களையும், இறகுகளையுடைய பெண்