பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)13. திருப்பூந்தராய்493

2934. தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
  பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.       3


அழித்தவராகிய சிவபெருமான், மலர்கள் நிறைந்த அழகிய சோலைகளையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில்
மகரந்தப் பொடிகள் தங்கிய கூந்தலையுடைய உமாதேவியின்
தலைவராய் வீற்றிருந்தருளுகின்றார். அவரைத் தரிசித்துப் பிறவிப்
பயனை அடையுங்கள்.

     கு-ரை: மூது அணி-பழமையான அணிவகுப்பையுடைய. முப்புரத்து
எண்ணிலோர்களை-முப்புரத்திலிருந்த அளவற்ற அசுரர்களை. வேது அணி
சரத்தினால் வீட்டினார் அவர்-வெம்மையையுடைய அம்பினால்
அழித்தவராகிய அப்பெருமான். திரிபுரம் எரித்தநாளில் அம்பின் அடிப்பாகம்
வாயு, இடைப்பாகம் திருமால், நுனிப்பாகம் நெருப்பு ஆக அமைந்தமையால்,
வேது அணி சரம் எனப்பட்டது. போது அணிபொழில்-மலர்களால்
அலங்கரிக்கப்பட்ட சோலைகளை உடைய. தாது அணி குழல் உமை-
மகரந்தப் பொடிகளைக் கொண்ட கூந்தலையுடைய உமாதேவியார்.

     3. பொ-ரை: செருக்குக் கொண்ட திரிபுரத்தசுரர்கள் அழியுமாறும்,
தேவர்களின் இன்பம் பெருகுமாறும், மேருமலையை வில்லாகப் பிடித்த
சிவபெருமான், அலைவீசுகின்ற கடல் பக்கங்களில் சூழ்ந்திருக்க,
பெருமையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்
தருளுவாராய், கூந்தலுக்கு உவமையாகக் கூறப்படும் பொருள்களெல்லாம்
தமக்கு அத்தகைய நிறமும், அழகும் இல்லையே என்று வருத்தமுறும்படி
அழகிய, கரிய கூந்தலையுடைய உமாதேவியின் கணவர் ஆவார்.
அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள்.

     கு-ரை: தருக்கிய-இறுமாந்த. திரிபுரத்தவர்கள்தாம் உக-அழியவும்.
பெருக்கிய-தேவர்க்கு இன்பத்தைப் பெருக்கவும். சிலை-மேருவில்.
பெற்றி-நன்மை. பொருகடல்-கரையை மோதும் கடல். வினைத்தொகை.
பொரு+கடல் எதுகைநோக்கியது. கருக்கிய குழல்-அம்பிகை குழலுக்கு.
உவமைகூறும் பொருள்களையெல்லாம் வருத்திய குழல். கருக்கிய-கருகும்படி
செய்த (வருந்திய என்றவாறு.) போர்க்கு அணிவகுத்துச் செல்லுதல்.