பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)14. திருப்பைஞ்ஞீலி499

14. திருப்பைஞ்ஞீலி

பதிக வரலாறு:

       திருப்பாச்சிலாச்சிராமத்தில் அம்மையப்பரை வணங்கி, அங்கிருந்து
கும்பிடுங் கொள்கையை மேற்கொண்ட திருஞான சம்பந்தர் பிற
சிவத்தலங்களைப் போற்றி ஏத்தித் திருப்பைஞ்ஞீலியைச் சேர்ந்து
சிவபெருமானைப் பாடிய பண்பரவும் தமிழ் மாலை இத் திருப்பதிகம்.

                    பண்: காந்தார பஞ்சமம்

ப.தொ.எண்:272   பதிக எண்:14

2943. ஆரிடம் பாடி ரடிகள் காடலால்
  ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்
நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.      1

2944. மருவிலார் திரிபுர மெரிய மால்வரை
  பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான்

                   திருச்சிற்றம்பலம்


     1. பொ-ரை: சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச்
செய்தவர். வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர்.
அணிவது கோவண ஆடை. சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர்.
இடபவாகனத்தில் ஏறியவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று
பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: ஆரிடம்-இருடிகளுக்கு அருளிய நூலாகிய வேதத்தை.
பாடிலர்-பாடலாகவுடையவர். காடு அலால்-புறங்காடு அல்லாமல். ஓர்
இடம் இலர்-ஓர் இடம் குறை இலர். அதனால் ஒரு குறைவும் இல்லாதவர்.
நீர் இடம் சடை-தண்ணீர் இருக்கும் இடம் சடை; பாரிடம்-பூதம்; பாடுவது.
வேதம், தங்குவதும் புறங்காடு. வேலை செய்வது பூதம். அத்தகையார்
வீற்றிருப்பது திருப்பைஞ்ஞீலியாகும் என்பது. பயிலல், முதல்
நிலைத் தொழிற்பெயர்.

     2. பொ-ரை: பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து