| 
	    பதிக வரலாறு:        திருப்பாச்சிலாச்சிராமத்தில் 
        அம்மையப்பரை வணங்கி, அங்கிருந்து கும்பிடுங் கொள்கையை மேற்கொண்ட திருஞான சம்பந்தர் பிற
 சிவத்தலங்களைப் போற்றி ஏத்தித் திருப்பைஞ்ஞீலியைச் சேர்ந்து
 சிவபெருமானைப் பாடிய பண்பரவும் தமிழ் மாலை இத் திருப்பதிகம்.
                     பண்: 
       காந்தார பஞ்சமம்  
	 
         
          | 2943. | ஆரிடம் 
            பாடி ரடிகள் காடலால் |   
          |  | ஓரிடங் 
            குறைவில ருடையர் கோவணம் நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்
 பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே.      1
 |  
       
         
          | 2944. | மருவிலார் 
            திரிபுர மெரிய மால்வரை |   
          |  | பருவிலாக் 
            குனித்தபைஞ் ஞீலி மேவலான் |                     திருச்சிற்றம்பலம் 
          
       1. 
        பொ-ரை: சிவபெருமான் இருடிகளுக்காக வேதத்தை அருளிச் செய்தவர். வசிப்பது சுடுகாடானாலும் அதனால் ஒரு குறையும் இல்லாதவர்.
 அணிவது கோவண ஆடை. சடைமுடியில் கங்கையைத் தாங்கியவர்.
 இடபவாகனத்தில் ஏறியவர். தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று
 பணிசெய்யத் திருப்பைஞ்ஞீலியில் வீற்றிருந்தருளுகின்றார்.
       கு-ரை: 
        ஆரிடம்-இருடிகளுக்கு அருளிய நூலாகிய வேதத்தை. பாடிலர்-பாடலாகவுடையவர். காடு அலால்-புறங்காடு அல்லாமல். ஓர்
 இடம் இலர்-ஓர் இடம் குறை இலர். அதனால் ஒரு குறைவும் இல்லாதவர்.
 நீர் இடம் சடை-தண்ணீர் இருக்கும் இடம் சடை; பாரிடம்-பூதம்; பாடுவது.
 வேதம், தங்குவதும் புறங்காடு. வேலை செய்வது பூதம். அத்தகையார்
 வீற்றிருப்பது திருப்பைஞ்ஞீலியாகும் என்பது. பயிலல், முதல்
 நிலைத் தொழிற்பெயர்.
       2. 
        பொ-ரை: பகையசுரர்களின் முப்புரங்களும் எரிந்து  |