| 2985. |
கஞ்சியுங்
கவளமுண் கவணர் கட்டுரை |
| |
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே. 10 |
| 2986. |
விண்ணவர்
தொழுதெழு விசய மங்கையை |
| |
நண்ணிய
புகலியுள் ஞானசம் பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே. 11
|
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: கஞ்சி உண்ணும் புத்தர்களும், கவனமாக உணவு
உண்ணும் சமணர்களும் உரைக்கின்ற கருத்துக்கள் நஞ்சினும்
கொடியனவாகும். நம்மவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளார். சிவந்த
சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம் வித்தியாதரர்கள் தொழுது
வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
கவணர் - மாறுபட்ட தன்மையை யுடையவர்கள், வடசொல்.
கஞ்சியும் கவளமும் உண்பவர், முறையே சமணரும் புத்தரும் ஆவார்.
11.
பொ-ரை: விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசயமங்கை
என்னும் திருத்தலத்தை அடைந்து, திருப்புகலியில் அவதரித்த
ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத
வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர். அவர்கள் சிவகதி அடைவது
உறுதியாகும்.
கு-ரை:
ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர். சிவ
புண்ணியச் செல்வர் ஆவர். அவர்கள் சிவாநந்தப் பெரு வாழ்வு அடைவது
திண்ணம்.
|
ஏழு திருமுறைகளிலும்
பதிகங்கள் உள்ள தலங்கள்
1. திரவாரூர்.2.
திருகச்சியேகம்பம். 3. திருமறைக்காடு.
ஆக மூன்று
தலங்கள்.
|
|