| 
         
          | 18. திருவைகல் மாடக்கோயில் |  
       பதிக வரலாறு:      திருக்கோழம்பத்தைக்கண்டு 
        இறைஞ்சி, மன்றுளார் மகிழ் வைகல் மாடக்கோயிலைச்சார்ந்து, அதில் மன்னிய மருந்தை வழிபட்டுப் போற்றி
 மொழிந்த செந்தமிழ்மாலை இத்திருப்பதிகம்.
 பண்: 
        காந்தார பஞ்சமம்  
         
          | ப. தொ. எண்: 276 |  | பதிக 
            எண்:18 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 2987. | துளமதி யுடைமறி தோன்று கையினர் |   
          |  | இளமதி 
            யணிசடை யெந்தை யாரிடம் உளமதி யுடையவர் வைக லோங்கிய
 வளமதி தடவிய மாடக் கோயிலே.            1
 |  
         
          | 2988. | மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர் |   
          |  | மையகண் மலைமக ளோடும் வைகிடம் வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
 செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.     2
 |  
       1. 
        பொ-ரை: இறைவன், துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன். இளம்பிறையை அணிந்துள்ள சடையன். எம்
 தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள்
 வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், அழகிய சந்திரனை
 வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும்.
       கு-ரை: 
        து(ள்)ளமதியுடைமறி - துள்ளிக் குதிக்கக் கருத்து உடையமான் கன்று. உளம் - உள்ளம். வைகல் - தலத்தின் பெயர். மாடக்கோயில்
 ஆலயத்தின் பெயர்.
       2. 
        பொ-ரை: இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர். வேதத்தை அருளிச்செய்தவர். அவர், மை தீட்டிய கரிய கண்ணுடைய
 மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும்
 இடமாவது, இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும்
 |