|
இயலைவா
னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்
பெயர ர்கோ யில்அர தைப்பெரும் பாழியே. 2 |
3120. |
கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின் |
|
மூடல்சா
லவ்வுடை யார்முளி கானிடை
ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
பீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே. 3 |
3121. |
மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார் |
|
மூவிண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்
பண்ணர்பா டல்உடை யாரொரு பாகமும்
பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே. 4 |
கொள்ளுமாறு அழகிய
தோற்றத்துடன் பலியேற்று உழலும் தன்மையுடையவர்
சிவபெருமான். அவருடைய தன்மைகள் வானவர்களும், அடியவர்களும்
எண்ணுதற்கு அரிய. பல திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும்
அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.
கு-ரை:
கயல் போன்ற கண்ணியரும், சேல் போன்ற கண்ணியருமாகிய
பல பெண்கள் (தாருகா வனத்து முனிபன்னியர்) பயலை - பசலை.
பான்மையார் - தன்மையுடையவர். இயலை - தம் தன்மைகளை;
நினைந்தோர்களுக்கு எண்ணுதற்கரிய பல பெயரையுடையராயிருப்பார். அவர்
எழுந்தருளியிருக்குங் கோயில், அரதைப் பெரும்பாழி.
3.
பொ-ரை: அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று இறைவர்
அருள்புரிபவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப்
போர்த்துக் கொண்டவர். அருவருக்கத்தக்க சுடுகாட்டில் நடனம் புரிபவர்.
அழகிய பெருமையுடைய அப்பெருமான் கோயில் கொண்டருளுவது
திருஅரதைப் பெரும்பாழியே.
கு-ரை:
கோடல் - பிச்சை கொள்ளுதல். மூடல் - போர்வை;
தொழிலாகுபெயர். முளிகான்-சுடுகாடு. பீடர்-பெருமையுடையவர்.
4.
பொ-ரை: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற
ஐம்பூதங்களாக விளங்குபவர் இறைவர். வேதத்தின் உண்மைப்
|