|
சேணுலா
மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே. 10 |
3128. |
நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப் |
|
பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே. 11 |
திருச்சிற்றம்பலம்
ராய், ஆகாயத்தில்
திரியும் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு அழித்த
சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.
கு-ரை:
ஏண் இலாத மொழி-பெருமையற்ற சொற்கள். சேண்-ஆகாயம்.
11.
பொ-ரை: கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத்தோரால் போற்றி
வணங்கப்படும் திரு அரதைப் பெரும்பாழியைப் போற்றி, புகழுடைய
சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய
இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
கு-ரை:
நீரின்ஆர் - நீரினால் நிறைந்த. ஏரின் ஆர் - அழகால்
நிறைந்த. தமிழ்வ(ல்)லார்க்கு இல்லையாம் பாவமே.
திருஞானசம்பந்தர்
புராணம்
பாடும்அர தைப்பெரும் பாழியே முதலாகச்
சேடர்பயில் திருச்சேறை திருநாலூர் குடவாயில்
நாடியசீர் நறையூர்தென் திருப்புத்தூர் நயந்திறைஞ்சி
நீடுதமிழ்த் தொடைபுனைந்தந் நெடுநகரில் இனிதமர்ந்தார்.
-சேக்கிழார். |
|