| 
         
          |  | வண்டுலாம் 
            பொழிலணி மயேந்திரப் பள்ளியிற் செண்டுசேர் விடையினான் றிருந்தடி பணிமினே.  2
 |  
         
          | 3131. | கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும் |   
          |  | தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமு மாங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள்
 ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.      3
 |  
         
          | 3132. | வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு |   
          |  | சங்கமா 
            ரொலியகில் தருபுகை கமழ்தரு மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
 எங்கணா யகன்றன திணையடி பணிமினே.       4
 |  
  மலர்ந்துள்ள குளங்களும், 
        வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக நடைபயிலும் இடபத்தை
 வாகனமாகக் கொண்ட சிவபெருமானின், உயிர்களை நன்னெறியில்
 செலுத்தும் திருவடிகளை வணங்குவீர்களாக.
       கு-ரை: 
        கண்டல்-நீர்முள்ளி. உலாம்-உலாவும். செண்டு-வட்டமாக நடை பயிலுதல்.
       3. 
        பொ-ரை: கோங்கு, வேங்கை, செழுமையான மலர்களையுடைய புன்னை, தேன் துளிகளையுடைய கொன்றை, சிறந்த மலர்களை உடைய
 குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும், மாமரங்களும், கரும்புகள்
 நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும்
 சிவபெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக.
       கு-ரை: 
        சோலைகளில் கோங்கு குரவம் முதலிய மரங்களும்; வயல்-வயல்களில். கரும்பும் பொருந்திய, மயேந்திரப்பள்ளி என்பது
 முன்னடிகளின் பொருளாதலின் அதற்கேற்பச் சோலையில் என்று ஒரு
 சொல் வருவித்து, வயல் மாவும் கரும்பும் எனமாற்றி ஏழனுருபு விரிக்க.
 மா + கரும்பு = மாங்கரும்பு என்ற உம்மைத் தொகையிலும் மெலிமிக்கது,
 எதுகை நோக்கி. மயேந்திரப்பள்ளியுள் ஆங்கு என்பதை "எம்மூர் ஆங்கண்"
 என்பதுபோற் கொள்க.
       4. 
        பொ-ரை: வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு உணர்த்த
 |