|  
       
       
        அவதரித்த ஞானசம்பந்தன் 
        அருளிய இப்பத்துப் பாடல்களையும் பக்தியுடன்  
        ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை. அவர்கள் தீவினைகளிலிருந்து நீங்கப்  
        பெற்றவர்கள் ஆவர். 
            கு-ரை: 
        கோடு - யானைத்தந்தம். ஏடுசென்று அணைதரும் ஏடகம்.  
        இப்பாடல் அகச்சான்று குறிக்கும் பாடல்களில் ஒன்று (தி.12 திருஞா.புரா.850.)  
      
         
          | 
             திருஞானசம்பந்தர் 
              புராணம்  
            ஆற்றின்மேற் 
              செல்லும் ஏடு தொடர்ந்தெடுப் பதற்கு வேண்டிக் 
              காற்றென விசையிற் செல்லுங் கடும்பரி ஏறிக்கொண்டு 
              கோற்றொழில் திருத்த வல்ல குலச்சிறை யார்பின் சென்றார்; 
              ஏற்றுயிர் கொடியி னாரைப் பாடினார் ஏடு தங்க. 
           | 
         
         
          |   | 
         
         
          ஏடகம் 
            பிள்ளை யார்தம் வன்னிஎன் றெடுத்துப் பாடக் 
            கூடிய நீரில் ஏடு குலச்சிறை யாருங் கூடிக் 
            காடிடமாக ஆடுங் கண்ணுதல் கோயில் மாடு 
            நீடுநீர் நடுவுட் புக்கு நின்றஏ டெடுத்துக் கொண்டார். | 
         
        
          |   | 
         
         
          |  
             தலைமிசை 
              வைத்துக் கொண்டு தாங்கரும் மகிழ்ச்சி பொங்க 
              அலைபுனற் கரையில் ஏறி அங்கினி தமர்ந்த மேருச் 
              சிலையுடை யவர்தாள் போற்றி மீண்டுசென் றணைவார்தெய்வ 
              மலைமகள் குழைத்த ஞானம் உண்டவர்தம்பால் வந்தார். 
                                               
              -சேக்கிழார்.  
             | 
         
        |