பதிக வரலாறு:
ஆளுடைய
பிள்ளையார், திருக்கடிக்குளம் இறைஞ்சி,
திருவிடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி, பிறபதிகளும் வணங்கிப் பரவிச்
சென்று, திருவுசாத்தனத்துத் தேவர்பிரான் கழல் பணிந்து நீரிடைத்துயின்ற
மால் போற்றும்படி பாடிய செந்தமிழ்ப்பதிகம் இது.
பண்:
கொல்லி
ப.தொ.எண்:291 |
|
பதிக
எண்: 33 |
திருச்சிற்றம்பலம்
3150. |
நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான் |
|
போருடைச்
சுக்கிரீ வன்அநு மான்றொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே. 1 |
3151. |
கொல்லையே றுடையவன் கோவண ஆடையன் |
|
பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார் |
1.
பொ-ரை: பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் அவதாரமான
இராமனும், இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோரும்
தொழுது வணங்கக் கருநிற நஞ்சை உண்டு காத்தருள் செய்த எம்
பெருமைக்குரிய, எங்களை ஏவல்கொள்ளும் தலைவனான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
கு-ரை:
நீரிடைத்துயின்றவன் - இராமன். பாற்கடலில் துயிலும்
திருமாலிடம் வானவர், அரக்கர் தந்த துயரை முறையிட, இராமனாகப்
பிறந்தமை குறித்து 'இராமனை நீரிடைத் துயின்றவன்' என்றார். நீர்; கடலை
ஆகு பெயராற் குறிக்கப் பொதுப்பெயர் சிறப்புப் பெயராய்ப் பாற்கடலைக்
குறித்தது. அனுமன் தொழச் சேடர்வாழ் திருவுசாத்தானம் என்க. சேடர்
வாழ் - வாழ்த்தல்; வாழ்த்துவது என்னும் பொருளாதலின் வாழ் முதனிலைத்
தொழிற்பெயர்.
2.
பொ-ரை: முல்லைநிலம் சார்ந்த எருதை (திருமாலை) இறைவன்
வாகனமாக உடையவன். கோவண ஆடை உடையவன்.
|