பக்கம் எண் :

620திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

33. திருவுசாத்தானம்

பதிக வரலாறு:

     ஆளுடைய பிள்ளையார், திருக்கடிக்குளம் இறைஞ்சி,
திருவிடும்பாவனம் ஏத்தி எழுந்தருளி, பிறபதிகளும் வணங்கிப் பரவிச்
சென்று, திருவுசாத்தனத்துத் தேவர்பிரான் கழல் பணிந்து நீரிடைத்துயின்ற
மால் போற்றும்படி பாடிய செந்தமிழ்ப்பதிகம் இது.

பண்: கொல்லி

ப.தொ.எண்:291   பதிக எண்: 33

திருச்சிற்றம்பலம்

3150. நீரிடைத் துயின்றவன் றம்பிநீள் சாம்புவான்
  போருடைச் சுக்கிரீ வன்அநு மான்றொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தவெம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.        1

3151. கொல்லையே றுடையவன் கோவண ஆடையன்
  பல்லையார் படுதலைப் பலிகொளும் பரமனார்


     1. பொ-ரை: பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் அவதாரமான
இராமனும், இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோரும்
தொழுது வணங்கக் கருநிற நஞ்சை உண்டு காத்தருள் செய்த எம்
பெருமைக்குரிய, எங்களை ஏவல்கொள்ளும் தலைவனான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.

     கு-ரை: நீரிடைத்துயின்றவன் - இராமன். பாற்கடலில் துயிலும்
திருமாலிடம் வானவர், அரக்கர் தந்த துயரை முறையிட, இராமனாகப்
பிறந்தமை குறித்து 'இராமனை நீரிடைத் துயின்றவன்' என்றார். நீர்; கடலை
ஆகு பெயராற் குறிக்கப் பொதுப்பெயர் சிறப்புப் பெயராய்ப் பாற்கடலைக்
குறித்தது. அனுமன் தொழச் சேடர்வாழ் திருவுசாத்தானம் என்க. சேடர்
வாழ் - வாழ்த்தல்; வாழ்த்துவது என்னும் பொருளாதலின் வாழ் முதனிலைத்
தொழிற்பெயர்.

     2. பொ-ரை: முல்லைநிலம் சார்ந்த எருதை (திருமாலை) இறைவன்
வாகனமாக உடையவன். கோவண ஆடை உடையவன்.