3165. |
மஞ்சர்தா
மலர்கொடு வானவர் வணங்கிட |
|
வெஞ்சொலார்
வேடரோ டாடவர் விரும்பவே
அஞ்சொலா ளுமையொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயிறருந் திருமுது குன்றமே. 7
|
3166. |
காரினா
ரமர்தருங் கயிலைநன் மலையினை |
|
ஏரினார்
முடியிரா வணனெடுத் தானிற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.
8 |
உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
இடமாவது, தேன் துளிக்கும்
பூஞ்சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
பெரியதோர் வானம் - பெரியதாகிய வானம். ஓர் - அசை.
அரவர் - அரவை யணிந்தவர்.
7.
பொ-ரை: வலிமை மிகந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள்
மலர்தூவிப் போற்றி வணங்க, கொடுந்தொழில் செய்யும் வேடர்களும், பிற
ஆடவர்களும் விரும்பித் தொழ, அழகிய இன்சொல் பேசும் உமாதேவியோடு
இறைவர் வீற்றிருந்தருளும் இடம் வேதங்களை நன்கு கற்றவர்களும், பக்திப்
பாடல்களைப் பாடுபவர்களும் வசிக்கின்ற திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
மஞ்சர் - சிவபெருமான். மைத்து - வலிமை. வலிமையுடையவர்
மைந்தர்; அது போலியாய் மஞ்சர் என ஆயிற்று. மஞ்சா போற்றி
மணாளாபோற்றி (தி.8 திருவா.பா.4 அடி. 183) செஞ்சொல் - நேரே
பொருளுணர்த்தும் சொல். (குறிப்பிற் பொருளுணர்த்தல் முதலியன வியங்கியச்
சொல்) கலைச்செஞ்சொலார் (விருத்தாசல புராணம்).
8.
பொ-ரை: மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர்கட்கு
அருள்புரியும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்மைதரும் கயிலை மலையினை,
அழகிய முடியுடைய இராவணன் எடுத்தபோது, அவனை நலியச் செய்த
இறைவன், கச்சணிந்த முலையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம்
சிறப்பு மிக்க திருமுதுகுன்றம் ஆகும்.
கு-ரை:
கார் மேகம் - பருவம் அறிந்து பெய்யும் மேகம்போல. பக்குவ
நோக்கி ஆன்மாக்களுக்கு அருள் செய்ய வரலால். காரினார் - மேகம்
போன்றவர். இராவணன் இறச் செய்து - என ஒரு சொல்
|