|
தலையல்
- மழைபெய்தல்-84-11
கங்காளம்-முழு எலும்புக்கூடு-93-6
துயர்-உள்ளம் பற்றிய நோய்-94-4
பிணி-உடலம் பற்றிய நோய்-94-4
நைதல்-உருகுதலுக்கு முன் உறும் நிகழ்ச்சி-97-5
முதலியன அருமையான சொற்பொருள் விளக்கங்களாம்.
9.
இருவகையாகப் பொருள்கோடல்
2-3
பஞ்சினேரடி-பஞ்சின் ஏர் அடி, பஞ்சின் நேரடி.
இன்-ஐந்தன் உருபும் தவிர்வழி வந்த சாரியையும்
ஆம்.
பஞ்சைப் போன்ற மெத்தென்ற அழகிய அடி, பஞ்சினை
ஒத்த அடி
-என இருவகையாகப் பொருள் செய்யலாம்.
3-1. அமர்ந்தவனே! நிறைமதி அருளினனே
அமர்ந்தவராகிய நீரே எனக்கு நிறைமதி அருளினீர்
ஆவீர்-
இடவழுவமைதி. இனி, அமர்ந்தவன் எவனோ அவனே எனக்கு நிறைமதி
அருளினவனும் ஆவன் என்றும் பொருள் செய்யலாம்.
3-3. நின்மலன்- இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன்.
தன்னைச்
சார்ந்த ஆன்மாக்களின் மலத்தை ஒழிப்பவன் என்பதும் ஆம்.
10-6. பனை இலங்கும் முடி.
முரசம் போன்ற தலை. பருத்து விளங்கும் முடி என்றும்
கூறலாம்.
13-4. பாகு அமர் மொழி - வெல்லப்பாகு போன்ற
இனிமை
பொருந்திய சொல். பாகம் ஆர் மொழி என்று பாடம் ஓதின் இனிமை
தங்கிய மொழி என்பது பொருள்.
|