| 
         
          | 3212. | ஆகமத்தொடு மந்திரங்க |   
          |  | ளமைந்தசங்கத 
            பங்கமாப் பாகதத்தொ டிரைத்துரைத்த
 சனங்கள்வெட்குறு பக்கமா
 மாகதக்கரி போற்றிரிந்து
 புரிந்துநின்றுணும் மாசுசேர்
 ஆகதர்க்கெளி யேனலேன்திரு
 வாலவாயர னிற்கவே.                   2
 |  
       
  மாதர்விழிக்கு மானின் 
        விழி உவமை. மாதராய் - மாதராள் என்பதன் விளி. பானல்வாய் - (பால்+நல்+வாய்) பால்வடியும் நல்ல வாயையுடைய.
 ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ. பரிவு - இரக்கம். எய்திடல் -
 அடையாதே. பல அல்லல் சேர் - பல துன்பங்களையும் பிறர்க்கு
 விளைவிக்கின்ற. பிற வினைதொக்கது. திருவாலவாய் அரன்துணை
 நிற்கையினால் எளியேன் அலேன்.
       2. 
        பொ-ரை: வேத ஆகமங்களையும், மந்திரங்களையும், நன்கு பயின்ற வைதிக மாந்தர் வெட்கம் அடையும்படி அம்மொழியின் கூறாகிய
 பிராகிருத மொழியை ஆரவாரித்துப் பேசி மிக்க கோபத்தையுடைய
 யானைபோல் திரிந்து நின்றுண்ணும் அழுக்கு மேனியுடைய சமணர்கட்கு
 நான் எளியேன் அல்லேன், திருஆலவாய் அரன்துணை நிற்பதால்
 .      கு-ரை: 
        பங்கமா(க) (பக்கமாக) புரிந்து எனக் கூட்டுக. சங்கதம் - சமஸ்கிருதம் என்பதன் திரிபு. பாகதம் - ப்ராகிருதம் என்பதன் சிதைவு.
 (வடமொழி) வடமொழியின் திரிபு ஆகியமொழி இரண்டாம். எப்பொழுது
 வந்தாய் என்ற தொடரை எப்போவந்தே என்று பேசுவது போன்றது.
 பாகதத்தொடு இரைத்துரைத்த - பிராகிருத மொழியினால் ஆரவாரித்துச்
 சொல்லிய.
       சனங்கள் 
        - வைதீகமாந்தர். வெட்குறு - வெட்கமடையத்தக்க. பங்கம் ஆ - பங்கப்படவும். வெட்குறுபக்கமாப் புரிந்து - பாகதத்தோடு
 இரைத்துரைத்தல் முதலிய செயல்களைச் செய்து. மா - பெரிய. கதம் -
 கோபத்தை உடைய. கரிபோல், திரிந்து - செருக்குற்று. மாசு சேர் ஆகதர்
 - ஆர்கதர் என்பதன் திரிபு. நாடோறும் சிறிது சிறிதாகச் சேர்தலால் மாசு
 சேர் என்றார்.
 |