பக்கம் எண் :

68மூன்றாம் திருமுறையின்உரைத்திறம் 

     சதாசிவ மூர்த்தியின் நிறம் வெண்மை என்பதால் பால் நிகர்
உருவுடையீர் எனப்பட்டது.

     102-3, 109-11, 112-5, 120-7 முதலியனவும் காண்க.

11. சாத்திரக் கருத்துக்கள்

     2-10. முன்வினைப் பயனால் புறமதத்தில் பிறந்து அதன் பயனாகச்
சிவபெருமானைப் பழித்துரைத்து மேலும் தீவினைக்கே முயல்கின்றனர்.
அவ்வாறு அவர்கள் செய்வது கர்மவசத்தினால் ஆவது எனினும் அதுவும்
சிவன் செயலே என்று உணர்த்துவார். ‘ஆக்கினான்’ என இறைவன்
மேல்வைத்து ஓதினார்.

     3-7. அடியவர்கள் இருவினை ஒப்பு, மலபரிபாகம், சத்திநிபாதம்
முறையே எய்திச் சிவப்பேறு அடைவர் என்க.

     9-1. உலகத்திற்குச் சிருட்டிகருத்தரும் சங்கார கருத்தரும் ஆவர்
எனவே இரட்சக கருத்தரும் சிவபெருமான் ஒருவரே என்க. ‘படைப்போற்
படைக்கும் பழையோன், படைத்தவை காப்போற் காக்கும் கடவுள், காத்தவை
கரப்போன்’ என வரும் சுருதி வாக்கியங்களான் அறிக. (திருவாசகம்)

     21-6. உலகமாகிய காரியத்துக்கு இறைவன் நிமித்த காரணமாம்
தன்மையை அறிந்து ஏத்தும் இக்கருத்தை ‘கோலத்தாய்! அருளாய்!
உன்காரணம் கூறுதுமே அன்பர்க்கு’ என்னும் இத்திருமுறை முதற்பதிகத்தும்
காண்க.

     22-9. இப்பதிகம், இருவரும் காணாதசேவடி என்று மட்டும் குறிக்கிறது.
திருமாலால் காணமுடியாத அடி பிரமனாலும் காண முடியாது என்பதாம்.
அடியே காணாதார் முடி காணமாட்டாமையும் பெறப்பட வைத்தமை அறிக.

     25-11. திருநீறு ஒன்றையே பொருளாகக்கொண்டு முத்தி அடைந்தவர்
ஏனாதிநாதனார். சடைமுடி ஒன்றே காரணமாக எரியில் புகுந்து உயிர்நீத்து
முத்தியுற்றவர் புகழ்ச்சோழ நாயனார். திருநீறு முதலிய அனைத்தும் கூடிய
வேடத்தைப் பொருளென்று கொண்டு முத்திபெற்றவர் மெய்ப்பொருள்
நாயனார்.

     26-1. திரவிய சுத்தியின் பொருட்டு அஸ்திரமந்திரத்தால் நீர்