| 3261. |
பற்று மானு மழுவு மழகுற |
| |
முற்று
மூர்திரிந் துபலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுட்
பெற்ற மேற துகந்தார் பெருமையே. 7 |
| 3262. |
எடுத்த வல்லரக் கன்முடி தோளிற |
| |
அடர்த்து
கந்தருள் செய்தவர் காழியுட்
கொடித்த யங்குநற் கோயிலு ளின்புற
இடத்து மாதொடு தாமு மிருப்பரே. 8 |
போற்றும்படி நல்ல
பண்களை ஏழிசைகளோடு பாடிய வேடத்தர், மூன்று
கண்களை உடையவர். இவை கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளும்
தலைவரான சிவபெருமானின் புகழை உணர்த்துபவைகள் ஆகும்.
கு-ரை:
ஏத்து - உலகத்தார் போற்றத்தக்க இசையும் ஏழிசையும்,
பண்ணும் - உருக்(சாகித்தியம்)களையும், பாடிய வேடத்தார். சரிதை -
இங்குப் புகழ் என்ற பொருளில் வந்தது, இவை அண்ணலாகிய அடிகள்
புகழ்களேயாகும்.
7.
பொ-ரை: பெருமானார் தம் திருக்கரத்திலே மானையும்,
மழுவையும் அழகுற ஏந்தி, ஊர்முழுவதும் திரிந்து பிச்சை எடுக்க
முற்படுவார். வேதங்களை நன்கு கற்ற பெருமையுடைய நல்ல அந்தணர்கள்
வாழ்கின்ற சீகாழியில் இடபத்தை வாகனமாக விரும்பி வீற்றிருந்தருளுகின்ற
அச்சிவபெருமானது தன்மை இத்தன்மைத்தாகும்.
கு-ரை:
ஊர் முற்றும் திரிந்து பலி ஏற்பதற்கு முற்படுவர் என்பது
இரண்டாம் அடியின் பொருள். மூன்றாம் அடியில் கற்ற மா நல்(ல) மறையவர்
எனக்கொள்க. கற்ற என்பதனால் நூலறிவாகிய அபரஞானமும் நல்
என்றதனாற் பரஞானமும் குறித்தபடி. பெற்றம் ஏறு - பசுவின் ஆண். சிங்க
ஏறு என்றாற் போல. பெருமையே - பெருமை இத்தகையது ஆகும் என்பது.
8.
பொ-ரை: திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வல்லரக்கனான
இராவணனின் முடியும், தோளும் நெரியுமாறு அடர்த்து, பின் அவன்
எழுப்பிய சாமகானத்தால் மகிழ்ந்து அருள்
|