பக்கம் எண் :

686திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3261. பற்று மானு மழுவு மழகுற
  முற்று மூர்திரிந் துபலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுட்
பெற்ற மேற துகந்தார் பெருமையே.           7

3262. எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
  அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுட்
கொடித்த யங்குநற் கோயிலு ளின்புற
இடத்து மாதொடு தாமு மிருப்பரே.           8


போற்றும்படி நல்ல பண்களை ஏழிசைகளோடு பாடிய வேடத்தர், மூன்று
கண்களை உடையவர். இவை கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளும்
தலைவரான சிவபெருமானின் புகழை உணர்த்துபவைகள் ஆகும்.

     கு-ரை: ஏத்து - உலகத்தார் போற்றத்தக்க இசையும் ஏழிசையும்,
பண்ணும் - உருக்(சாகித்தியம்)களையும், பாடிய வேடத்தார். சரிதை -
இங்குப் புகழ் என்ற பொருளில் வந்தது, இவை அண்ணலாகிய அடிகள்
புகழ்களேயாகும்.

     7. பொ-ரை: பெருமானார் தம் திருக்கரத்திலே மானையும்,
மழுவையும் அழகுற ஏந்தி, ஊர்முழுவதும் திரிந்து பிச்சை எடுக்க
முற்படுவார். வேதங்களை நன்கு கற்ற பெருமையுடைய நல்ல அந்தணர்கள்
வாழ்கின்ற சீகாழியில் இடபத்தை வாகனமாக விரும்பி வீற்றிருந்தருளுகின்ற
அச்சிவபெருமானது தன்மை இத்தன்மைத்தாகும்.

     கு-ரை: ஊர் முற்றும் திரிந்து பலி ஏற்பதற்கு முற்படுவர் என்பது
இரண்டாம் அடியின் பொருள். மூன்றாம் அடியில் கற்ற மா நல்(ல) மறையவர்
எனக்கொள்க. கற்ற என்பதனால் நூலறிவாகிய அபரஞானமும் நல்
என்றதனாற் பரஞானமும் குறித்தபடி. பெற்றம் ஏறு - பசுவின் ஆண். சிங்க
ஏறு என்றாற் போல. பெருமையே - பெருமை இத்தகையது ஆகும் என்பது.

     8. பொ-ரை: திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வல்லரக்கனான
இராவணனின் முடியும், தோளும் நெரியுமாறு அடர்த்து, பின் அவன்
எழுப்பிய சாமகானத்தால் மகிழ்ந்து அருள்