| 
       பதிக வரலாறு:      திருவாரூர் அரசளிப்பவர் 
        அருளினால் அடியவர் குழுவும் பரிசனங்களும் புறத்து அணைந்து எதிர்கொள்ளும் பொழுது,
 மெய்த்தொண்டர் குழாத்தின் எதிர்வணங்கி, முத்தமிழ் விரகர் இத்தமிழ்
 பாடியருளினார்.
 பண்: கௌசிகம் 
         
          | ப.தொ.எண்:303 |  | பதிக 
            எண்: 45 |  திருச்சிற்றம்பலம் 
         
         
          | 3277. | அந்த மாயுல காதியு மாயினான் |   
          |  | வெந்த வெண்பொடிப் பூசிய வேதியன் சிந்தை யேபுகுந் தான்றிரு வாரூரெம்
 எந்தை தானெனை யேன்றுகொ ளுங்கொலோ.   1
 |  
         
          | 3278. | கருத்த னேகரு தார்புர மூன்றெய்த |   
          |  | ஒருத்த னேயுமை யாளொரு கூறனே திருத்த னேதிரு வாரூரெந் தீவண்ண
 அருத்த வென்னெனை யஞ்சலென் னாததே.     2
 |  
       1. 
        பொ-ரை: சிவபெருமான் உலகத்தின் ஒடுக்கத்திற்கும், தோற்றத்திற்கும் நிமித்த காரணன். திருவெண்ணீறு பூசிய வேத நாயகன்.
 என் சிந்தையில் புகுந்து விளங்குபவன். திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம்
 தந்தையான அவன் என்னை ஏற்று அருள் புரிவானோ!
       கு-ரை: 
        உலகின் முடிவும் முதலும் ஆகியவன் என்பது உலகின் தோற்ற ஒடுக்கங்கட்கும் நிமித்தகாரணனாய் உள்ளவன். எம் எந்தை -
 எங்கள் அனைவருக்கும் உரிய என் தந்தை. எம் என்றது பலதிறத்தினராகிய
 அடியவரை. அது "உருத்திர பல் கணத்தார்""பல்லடியார்" என்பனவற்றால்
 அறிக.
       2. 
        பொ-ரை: இறைவர் என் கருத்திலிருப்பவர். தம்மைக் கருதிப் போற்றாத பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அக்கினிக்கணை
 தொடுத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். ஒப்பற்றவர்,
 |