|
பொய்ய
ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே. 1 |
3340. |
சித்த னேதிரு வாலவாய் மேவிய |
|
அத்த
னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எத்த ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே. 2 |
3341. |
தக்கன் வேள்வி தகர்த்தரு ளாலவாய்ச் |
|
சொக்க
னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எக்க ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே. 3 |
செய்வீராக. பொய்யராகிய
சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு
மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.
கு-ரை:
செய்யனே - நடுநிலைமையை யுடையானே. ஒப்பநாடி
அத்தக ஒறுத்தல் என்னும் குறிப்புப்போலும்.
1.
பொ-ரை: எல்லாம் வல்ல சித்தரே! திருஆலவாயில்
வீற்றிருந்தருளிய தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக.
ஏமாற்றித் திரிவோராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு ஆருக
மதத்தில் பக்தியுடையோனாகிய பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.
கு-ரை:
சித்தன் - எல்லாம் வல்ல சித்தராகியவன். அத்தன் -
தலைவன். எத்தர் - ஏமாற்றுவோர். கொளுவும் சுடர் - பற்றவைத்த தீ.
பத்திமான் - (ஆருக மதத்திற்) பக்தியுடையவனாகிய அரசன். தென்னன்
- பாண்டியன்; தமிழ்நாட்டின் தென்பகுதியை ஆள்பவன்.
3.
பொ-ரை: சிவனை மதியாது தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்த
திருஆலவாய்ச் சொக்கரே! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக.
இறுமாப்புடைய சமணர்கள் இம்மடத்திற்குப் பற்ற வைத்த நெருப்பு
அத்தகையோர் பக்கமே சார்ந்து பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.
கு-ரை:
சொக்கன் - கண்டாரைச் சொக்கச் (மயங்க) செய்யும்
|