பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)51. திருஆலவாய்733

3349. அப்ப னாலவா யாதி யருளினால்
  வெப்பம் தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்த னுரைபத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.       11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: அண்டன் - தேவன்.

     11. பொ-ரை: ‘எனக்குத் தந்தையாக விளங்கும் திருஆலவாய்
ஆதிமூர்த்தியின் திருவருளால் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த நெருப்பின்
வெப்பமானது பாண்டிய மன்னனைப் பற்றுவதாக’ என்று உலக நியதிக்கு
ஏற்ற தன்மையில் ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகத்தை
ஓதவல்லவர்கள் குற்றமற்ற செல்வர்களாகத் திகழ்வர்.

     கு-ரை: மேதினிக்கு ஒப்ப - உலகுக்கு ஒக்கும்படியாக (உரைத்த
பதிகம்.) முதற்பாடலில் செய்யனே என அழைத்தமையுங் காண்க. பதிகக்
குறிப்பு. ஒவ்வொரு பாட்டிலும் கடவுளை விளிப்பன இங்கு உய்த்து
உணரத்தக்கன. எனை அஞ்சல் என்று அருள்செய், தீ பாண்டியர்க்கு ஆக
என இருவாக்கியங்களாகக் கொள்வது பொருத்தம்.

திருஞானசம்பந்தர் புராணம்

வெய்ய தீங்கிது வேந்தன்மேற்(று) எனும்விதி முறையால்
செய்ய னேதிரு வாலவாய் எனுந்திருப் பதிகம்
சைவர் வாழ்மடத் தமணர்கள் இட்டதீத் தழல்போய்ப்
பைய வேசென்று பாண்டியற் காகெனப் பணித்தார்.

                                 -சேக்கிழார்.