| 
         
          | 3349. | அப்ப னாலவா யாதி யருளினால் |   
          |  | வெப்பம் 
            தென்னவன் மேலுற மேதினிக் கொப்ப ஞானசம் பந்த னுரைபத்தும்
 செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.       11
 |  
        
        திருச்சிற்றம்பலம்
       
	   
      கு-ரை: 
        அண்டன் - தேவன்.
             11. 
        பொ-ரை: எனக்குத் தந்தையாக விளங்கும் திருஆலவாய் ஆதிமூர்த்தியின் திருவருளால் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த நெருப்பின்
 வெப்பமானது பாண்டிய மன்னனைப் பற்றுவதாக என்று உலக நியதிக்கு
 ஏற்ற தன்மையில் ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத்திருப்பதிகத்தை
 ஓதவல்லவர்கள் குற்றமற்ற செல்வர்களாகத் திகழ்வர்.
       கு-ரை: 
        மேதினிக்கு ஒப்ப - உலகுக்கு ஒக்கும்படியாக (உரைத்த பதிகம்.) முதற்பாடலில் செய்யனே என அழைத்தமையுங் காண்க. பதிகக்
 குறிப்பு. ஒவ்வொரு பாட்டிலும் கடவுளை விளிப்பன இங்கு உய்த்து
 உணரத்தக்கன. எனை அஞ்சல் என்று அருள்செய், தீ பாண்டியர்க்கு ஆக
 என இருவாக்கியங்களாகக் கொள்வது பொருத்தம்.
 
       
         
          | திருஞானசம்பந்தர் 
              புராணம்  வெய்ய 
              தீங்கிது வேந்தன்மேற்(று) எனும்விதி முறையால்செய்ய னேதிரு வாலவாய் எனுந்திருப் பதிகம்
 சைவர் வாழ்மடத் தமணர்கள் இட்டதீத் தழல்போய்ப்
 பைய வேசென்று பாண்டியற் காகெனப் பணித்தார்.
 -சேக்கிழார்.
 |  |