| 3392. |
குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய |
| |
ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர்
பேசநின்றாய்
திண்டேர் வீதியதார் திருவான்மி
யூருறையும்
அண்டா வுன்னையல்லா லடையாதென
தாதரவே. 10 |
| 3393. |
கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு |
| |
காழிதனில்
நன்றான புகழான் மிகுஞானசம்
பந்தனுரை |
நாக அணையான், நாகணை
என்பது மரூஉ கோணாகணையானும் எனப்
பின்னும் வருதல் அறிக. நீள்கழல் - பாதாளத்தின் கீழும் நீண்ட திருவடிகள்.
மேல்முடி - வானுலகின் மேலும் சென்றமுடி. நெறியார் கழல்.
10.
பொ-ரை: விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும், முரட்டுத்
தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய் உன்னைப்பேச
வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும் வீதிகளையுடைய
திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தேவனே! உன்னையல்லால் என்
மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது.
கு-ரை:
குண்டு ஆடும் சமணர் - விதண்டை பேசுகின்ற, கண்டார்
காரணங்கள் கருதாதவர் - சிலவற்றையறிந்தும், அவற்றின் காரணங்களை
அறியாதவர் என்றது, உலகு உள் பொருள் என்று அறிந்தும் அது ஒருவனாற்
படைக்கப்படவில்லை எனல் போல்வன. அண்டா - தேவனே.
11.
பொ-ரை: பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து
விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த ஞானசம்பந்தன்,
இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை
ஓதவல்லவர்கட்குக் கொடிய தீவினையானது நீங்கும்.
|