| 3434. |
நெடுமுடி பத்துடைய நிகழ்வாளரக் |
| |
கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப் பரு மால்வரைக்
கீழடர்த்தான்
கொடுமட றங்குதெங்கு பழம் வீழ்குட
மூக்கிடமா
இடுமண லெக்கர்சூழ விருந் தானவ
னெம்மிறையே. 8 |
| 3435. |
ஆரெரி யாழியானு மல ரானும |
| |
ளப்பரிய
நீரிரி புன்சடைமே னிரம் பாமதி
சூடிநல்ல |
புரங்களையும் சிதைத்தவன்.
கொத்தாகக் காய்க்கும் பலாக்கனிகள் தாமாகவே
கனிந்து வீழும் வளம் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில்
இலைபோன்ற சூலப்படையை ஏந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம்
வணங்கும் கடவுளாவான்.
கு-ரை:
வையம் உய்ய மங்கைபாகம் மகிழ்ந்தான். உலகம் அவன் உரு
ஆகலான். உலகில் இல்லற தருமம் நடத்தற்கு அவன் அம்மையோடு
கூடியிருத்தலின் வையம் உய்ய மங்கை பாகம் மகிழ்ந்தான் என்றார்.
பெண்பால் உகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் விண்பாலி யோகெய்தி
வீடுவர்காண் சாழலோ - என்ற திருவாசகத்தாலும் அறிக. இலைமலி சூலம்
- இலைவடிவத்தையுடைய சூலம்.
8.
பொ-ரை: நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய இராவணனின்
உடலானது துன்பப்படுமாறு கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய்,
வளைந்த மடல்களையுடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள்
விழும் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் மணல் திட்டு சூழ
வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாம் வணங்கும் கடவுளாவான்.
கு-ரை:
இடர்கண்டு - துன்பப்பட்டு, அயர - தளர, அடர்த்தான்.
கொடு - வளைந்த, மணல் எக்கர் - மணல் திடல்.
9.
பொ-ரை: அக்கினிபோல் ஒளிரும் சக்கராயுதப் படையுடைய
திருமாலும், பிரமனும் அளக்கமுடியாதவனாய், கட்டுப்படுத்த
|