பக்கம் எண் :

814திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  திக்கு நிறைபுகழார் தரு தேவர்பி
     ரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                   10

3459. திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை
       மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தரு சண்பையர்
     தந்தலைவன்
எண்ணமர் பல்கலையா னிசை ஞானசம்
     பந்தன்சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினை யாயின
     பற்றறுமே.                       11

திருச்சிற்றம்பலம்


அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: நக்குரு - நக்க உரு. ஆடையணியா உடம்பு. நயந்துடை -
நயந்து உடை, பொக்கர் - பொய்யர். பொக்கு - திசைச்சொல். பொய்யென
- பொய் என்னும்படி திக்கு நிறைந்த புகழ் உடைய பிரான் என்க. கனகம்
- பொன்போலும். மிக்கு உயர்சோதியவன் - மிகுந்த உயர்ந்த உடம்பின்
ஒளியையுடையவன் “பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து” என்றும்
(தி.4.ப.81.பா.9.) “பொன்னார் மேனியனே” என்றும் (தி.7.ப.24.பா.1.) வருவன
காண்க.

     11. பொ-ரை: உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை என்னும்
திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி, குளிர்ச்சி
பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் அவதரித்த
தலைவனான, பலகலைகளில் வல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு
கூடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும்.

     கு-ரை: திண்(ண)ம் அமரும் புரிசை - உறுதி தங்கிய மதில். திண்மை
- திண் என்று ஆயது. “ஈறுபோதல்” என்னும்விதி. சூழ் தரு - சூழ்ந்த. எண்
அமர் - பாராட்டுதல் அமைந்த பல்கலை. இசை - இசைத்தமிழால்.