| 
       
         
          |  | திக்கு 
            நிறைபுகழார் தரு தேவர்பி ரான்கனகம்
 மிக்குயர் சோதியவன் விரும் பும்மிடம்
 வெண்டுறையே.                   10
 |  
         
          | 3459. | திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை |   
          |  | மேயவனைத் தண்ணம ரும்பொழில்சூழ் தரு சண்பையர்
 தந்தலைவன்
 எண்ணமர் பல்கலையா னிசை ஞானசம்
 பந்தன்சொன்ன
 பண்ணமர் பாடல்வல்லார் வினை யாயின
 பற்றறுமே.                       11
 |   
        திருச்சிற்றம்பலம்
       
  அப்பெருமான் வீற்றிருந்தருளும் 
        இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.
       கு-ரை: 
        நக்குரு - நக்க உரு. ஆடையணியா உடம்பு. நயந்துடை - நயந்து உடை, பொக்கர் - பொய்யர். பொக்கு - திசைச்சொல். பொய்யென
 - பொய் என்னும்படி திக்கு நிறைந்த புகழ் உடைய பிரான் என்க. கனகம்
 - பொன்போலும். மிக்கு உயர்சோதியவன் - மிகுந்த உயர்ந்த உடம்பின்
 ஒளியையுடையவன் பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து என்றும்
 (தி.4.ப.81.பா.9.) பொன்னார் மேனியனே என்றும் (தி.7.ப.24.பா.1.) வருவன
 காண்க.
       11. 
        பொ-ரை: உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி, குளிர்ச்சி
 பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் அவதரித்த
 தலைவனான, பலகலைகளில் வல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு
 கூடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும்.
       கு-ரை: 
        திண்(ண)ம் அமரும் புரிசை - உறுதி தங்கிய மதில். திண்மை - திண் என்று ஆயது. ஈறுபோதல் என்னும்விதி. சூழ் தரு - சூழ்ந்த. எண்
 அமர் - பாராட்டுதல் அமைந்த பல்கலை. இசை - இசைத்தமிழால்.
 |