| 3578. |
தூயவிரி தாமரைக ணெய்தல்கழு |
| |
நீர்குவளை
தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு
மோசைபயின் மாறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன
தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை
யாயினவு மகல்வதெளிதே. 9 |
கு-ரை:
பொன்மாடம்மிசை - பொன்மயமான மாடங்களின் மேல்
கட்டிய. தூசு துகில் - வெள்ளாடையினாலாகிய. நீள்கொடிகள் - நெடிய
கொடிகளே. மேகமொடு - கரிய மேகத்தோடு. தோய்வன - படிவனவாய்.
மாசுபடுசெய்கை - மாசுபடுசெய்கை மிக. பிற மாசுபடு செய்கை இல்லாத -
(மாகறல்) மிசையே. என்பதின் ஏகாரத்தைக் கொடிகளோடு கூட்டுக. (மாதவர்கள்) ஓதி
- வேதங்களை ஓதிக்கொண்டு. மலி - திரள்கின்ற, மாகறல்
உளான். பாசுபத இச்சை - பாசுபத வேடத்தில் இச்சையையும். வரி - நெடிய.
நச்சரவு - (நஞ்சு + அரவு) விடப்பாம்பை. கச்சை உடை - கச்சையாக
உடுத்தலையும். பேணி - மேற்கொண்டவன், (இகரவிகுதி ஆண்பாலில்
வந்தது. உடை: (உடு+ஐ) உடுஐ - உடுத்தலை, முதனிலைத் தொழிற்பெயர்,
அணிதல் என்னும் பொது வினையாற் கூறற் பாலது. உடுத்தல் என வேறு
வினையாற் கூறப்பட்டது. (அழகு ஆர் பொடி பூசு ஈசன் என ஏத்த). வினை
- வினைகள். இலபோகும் - இல குறிப்பு முற்றெச்சம். பாசுபத வேடமாவது:
- சவந்தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு, தலையோடு மயிர்க்கயிறு
தரித்தான்றன்னைப், பவந்தாங்கு பாசுபத வேடத்தானை என்னும்
திருச்செங்காட்டங்குடித் திருத் தாண்டகத்தால் உணரப்படுவது.
9.
பொ-ரை: தூய்மையான தாமரை, நெய்தல், கழுநீர், குவளை
போன்ற மலர்கள் விரிய, அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய
வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல்
என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அவன் தன்
காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன்.
அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை
எளிதில் நீங்கும்.
கு-ரை:
தூய்மையான. விரிதாமரைகள் - தாமரை மலர்களும். நெய்தல்
கழுநீர் குவளைதோன்ற - இம்மலர்களும்
|