பக்கம் எண் :

966திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

கொத்தலர் மலர்ப்பொழிலி னீடுகுல
     மஞ்ஞைநட மாடலதுகண்
டொத்தவரி வண்டுக ளுலாவியிசை
     பாடுதவி மாணிகுழியே.                4

3628. மாசின்மதி சூடுசடை மாமுடியர்
       வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க
     ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழன் மடந்தையர்கண்
     மாளிகையின் மன்னியழகார்
ஊசன்மிசை யேறியினி தாகவிசை
     பாடுதவி மாணிகுழியே.                5


பூக்களையுடைய சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட அதைப்பார்த்த
வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு இசைபாடுகின்ற
திருமாணிகுழி ஆகும்.

     கு-ரை: நித்தம் - நாடோறும். நியமத் தொழிலனாகி - அநுட்டானம்
முதலிய நியமமாய்ப் பூண்டவனாய். நெடுமால் - திருமால். குறளன் ஆகி -
வாமன வடிவங்கொண்டு. மிகவும் சித்தம் (அது) ஒருக்கி - மனத்தை நன்கு
ஒரு முகப்படுத்தி. (வழிபாடு செய்ய) நின்ற - இருந்த. சிவலோகன் -
சிவலோக நாயகனாகிய சிவபெருமான் (இடமாம்.) கொத்து அலர் -
கொத்துக்களிலே மலர்ந்த. மலர்ப் பொழிலில் - மலர்களையுடைய
சோலையில். நீடுகுல மஞ்ஞை - சிறந்த மயில்கள். நடமாடல் அது -
நடித்தலை. கண்டு - பார்த்து, வரி வண்டுகள் - கீற்றுகளையுடைய
வண்டுகள். உலாவி - சுற்றி. ஒத்த இசைபாடு - ஒத்த இசைகளைப் பாடுகின்ற
(உதவிமாணிகுழி).

     5. பொ-ரை: சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில்
சூடியவர். வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை அழித்து நற்குண
நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர். அப்பெருமான்
வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க மெல்லிய கூந்தலையுடைய பெண்கள்,
மாளிகைகளில் தங்கி அழகிய ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக
ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற திருமாணிகுழி ஆகும்.